உசுப்பூர் கைலாசநாதர் கோயில்
உசுப்பூர் கைலாசநாதர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், உசுப்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும்.[1] வரலாறுஇக்கோயில் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதை சிறுத்தொண்ட நாயனார் கட்டியதாக ஐதீகம் உள்ளது.[2] கோயில் அமைப்புஇக்கோயிலிலுக்கு எதிரே சிவ தீர்த்தம் உள்ளது. இந்தக் கோயிலில் இராச கோபுரம் இல்லை. கோயில் கொடிமரத்தை அடுத்துச் சென்றால் மகாமண்டபத்தை அடையலாம். மகாமண்டபத்தின் வலப்புறத்தில் தெற்கு நோக்கி கல்யாண சுந்தரி அம்மன் சந்நிதி உள்ளது. மகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் வாயிலின் வலப்புறமும் ஆட்கொண்டார், வலப்புறம் உய்யக்கொண்டார் என இரு துவாரபாலகர்கள் உள்ளனர். அதையடுத்து அமைந்துள்ள கருவறையில் கைலாசநாதர் வட்ட பீடத்தில் லிங்க வடிவில் உள்ளார். கோட்டத்தில் தென்முகக்கடவுள், லிங்கோத்பவர், நான்முகன், சண்டிகேசுவரர், சிவதுர்கை ஆகியோர் அமைந்துள்ளனர். விநாயகர், முருகன், நவகிரகங்களுக்கு உபசன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் சிறீதேவி, பூதேவி ஆகியோருடன் பூவராக சுவாமிக்கு சந்நிதி உள்ளது ஒரு தனிச்சிறப்பாகும்.[2] இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3] பூசைகள்இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மகாசிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் அமுது படையல் திருவிழா நடக்கிறது. மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia