உட்காரும் உரிமை![]() உட்காரும் உரிமை (Right to sit) என்பது தொழிலாளர்களுக்குப் பணியிடத்தில் இருக்கை வழங்குவதற்கான உரிமையை வழங்கும் சட்டங்களையும் கொள்கைகளையும் குறிக்கும். ஆஸ்திரியா, ஜப்பான், ஜெர்மனி, மெக்ஸிகோ, பிரான்ஸ், ஸ்பெயின், அர்ஜென்டினா, ஐக்கிய இராச்சியம், ஜமைக்கா, தென்னாப்பிரிக்கா, ஈஸ்வதினி, கேமரூன், தான்சானியா, உகாண்டா, லெசோதோ, மலேசியா, பிரேசில், இஸ்ரேல், அயர்லாந்து, சாம்பியா, கயானா, இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, பிரிட்டிஷ் கடல்கடந்த வட்டாரங்களான ஜிப்ரால்டர், மாண்ட்செராட் ஆகியவை "உட்காரும் உரிமை" சட்டங்கள் அல்லது கொள்கைகளை நிலைநாட்டியுள்ள ஆட்சிப்பகுதிகளுள் அடங்கும். அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில், கனடாவில் உள்ள பெரும்பாலான 1881 தொடங்கி 1917—க்கு முன்னரே பெண் தொழிலாளர்களுக்கு உட்காரும் உரிமையை நிறைவேற்றிவிட்டன. 1964-ஆம் ஆண்டு பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு நிறைவேற்றிய சுகாதார (வணிகம் மற்றும் அலுவலகங்கள்) உடன்படிக்கையில் உட்காருவதற்கான உரிமையும் உள்ளடங்கியிருந்தது. 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, 52 நாடுகள் இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. உலகச் சட்டங்கள்![]() நாடு தழுவிய உட்காரும் உரிமை மாநிலம், மாகாணம் அல்லது உள்ளூர் அளவில் உட்காரும் உரிமை. சுகாதாரத உடன்படிக்கை (வணிகம் மற்றும் அலுவலகங்கள்) 1964-ஐ ஏற்றுக் கொண்ட நாடுகள். சட்டம் இரத்து செய்யப்பட்டது. இந்தியா![]() உட்காரும் உரிமையை உறுதி செய்துள்ள இந்திய மாநிலங்கள் ![]() 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, இரண்டு இந்திய மாநிலங்கள் பணியிடத்தில் உட்காரும் உரிமையை நிறைவேற்றியுள்ளன, கேரளாஇந்தியாவின் பணியிடங்களில் உட்கார்ந்து பணியாற்றும் உரிமை இயக்கத்தை கேரளாவைத் தளமாகக் கொண்ட பெண்ணிய தொழிலாளர் சங்கமான பென்கூட்டு வழிநடத்தியது. கோழிக்கோடு நகரத்தைச் சேர்ந்த, ஒரு தையல்காரராக இருந்து செயற்பாட்டாளராக உருவெடுத்த விஜி பள்ளித்தோடி, பெண்கூட்டு தொழிலாளர் சங்கத்தை நிறுவினார்.[1] கேரளா, 2018-ஆம் ஆண்டு உட்காருவதற்கான உரிமையை நிலைநாட்டும் சட்டத்தை நிறைவேற்றியது. இதுவே இந்தியாவில் இவ்வாறு நிறைவேற்றப்பட்ட முதல் சட்டமாகும். விஜி கருத்துப்படி, சட்டத்தில் மாற்றங்கள் இருந்தபோதிலும், சில முதலாளிகள் இன்னும் இச்சட்டத்தினை நடைமுறைப்படுத்த மறுக்கின்றனர். இருக்கைகளை உறுதி செய்வதற்கான இயக்கம் இன்னும் முடிவடையவில்லை என்று குறிப்பிடும் விஜி, "பல முதலாளிகள் இன்னும் சட்டத்திற்குக் கட்டுப்படுவதில்லை. அவர்கள் தங்கள் ஊழியர்களை உட்கார அனுமதிப்பதில்லை என்பதில் இன்னும் பிடிவாதமாக உள்ளனர். இது மாற வேண்டும்" என்று கூறுகிறார்.[2] தமிழ்நாடுகேரளாவைத் தொடர்ந்து 2021 செப்டம்பரில் இதேபோன்ற ஒரு சட்டத்தை தமிழ்நாடு இயற்றியது.[3] தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன் இச்சட்டத்தை முன்மொழிந்தார். தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947-இன் திருத்தப்பட்ட உட்பிரிவாக உட்காரும் உரிமை வழங்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் பிரிவு 22-ஏ, திருத்தம் பின்வருமாறு கூறுகிறது: "ஒவ்வொரு நிறுவனத்தின் வளாகத்திலும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருத்தமான இருக்கை ஏற்பாடுகள் இருக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் தங்கள் வேலைநேரத்தின் போது உட்கார்ந்தபடியே பணியாற்றவோ, இளைப்பாறவோ கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆகவே, வேலை நேரம் முழுவதும் கட்டாயம் இடைவிடாது நின்று கொண்டே தான் பணியாற்ற வேண்டும் என்கிற சூழ்நிலையைத் தவிர்க்கலாம்"[4] மலேசியாமலேசிய தொழிலாளர் சட்டம் ஒரு தொழிலாளியின் உட்காரும் உரிமையைப் பாதுகாக்கிறது. தொழிற்சாலைகள், இயந்திரங்கள் (பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலவாழ்வு) ஒழுங்குமுறைகள் 1970 விதியில் 30 (1), (2) ஆகிய பிரிவுகள் இந்த உரிமையைப் பற்றி விவரிக்கின்றன.[5] சிங்கப்பூர்சிங்கப்பூரின் "சில்லறை வர்த்தகம், வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கான இருக்கைகள்" சட்டம் உட்காருவதற்கான உரிமையை உறுதி செய்கிறது.[6] இலங்கைஇலங்கை கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் சட்டம் 1954, பெண் தொழிலாளர்களுக்கு உட்காருவதற்கான உரிமையை வழங்கியது.[7] நிற்பதற்கான உரிமைசில ஆட்சிப்பகுதிகள் உட்காரும் உரிமை, நிற்கும் உரிமை ஆகிய இரண்டையுமே பாதுகாக்கின்றன. அமெரிக்க சம வேலைவாய்ப்புகள் ஆணையத்தின் கூற்றின் படி, மாற்றுத்திறனாளி அமெரிக்கர்கள் சட்டம், கருவுற்ற தொழிலாளர்கள் நலச் சட்டம் ஆகிய இரண்டு சட்டங்களும் உரிய மாற்றுத்திறனாளிகள், கருவுற்ற பெண்கள் பணியிடத்தில் எழுந்து நிற்கும் உரிமையை உறுதிசெய்கின்றன.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia