கோயில் கோட்டை என்பதே கோழிக்கோடு மருவியதாகக் கூறப்படுகிறது. முற்காலத்தில் சுள்ளிக்காடு எனவும் தமிழர்களால் கள்ளிக்கோட்டை எனவும் அழைக்கப்பெற்றது. ஆங்கிலேயர்களாலும் சீனர்களாலும் பிறராலும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பெற்றாலும், மலையாளிகள் இதை கோழிக்கோடு என்றே அழைக்கின்றனர்.
2001ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 436,527 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 49% ஆண்கள்; 51% பெண்கள் ஆவார்கள். கோழிக்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 85%; பெண்களின் கல்வியறிவு 82% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. கோழிக்கோடு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மலையாளமே இந்நகர மக்களின் தாய்மொழியும், ஆட்சிமொழியும் ஆகும். எனினும், பெரும்பான்மையானவர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளை புரிந்துகொள்ளக் கூடியவர்கள் என்று அறியப்படுகிறது.
ஊடகம்
முக்கிய மலையாள நாளிதழ்கள் அனைத்தும் இங்கு கிடைக்கின்றன. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நாளிதழ்கள் கிடைக்கின்றன. அனைத்திந்திய வானொலி மற்றும் தனியார் வானொலிகளும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன.
பெரும்பாலான மலையாள எழுத்தாளர்கள் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்களே.
Kozhikode Mavoor Road Bus Stand
கல்வி
இங்குள்ள நூறு சதவீத மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.