உண்மைநிலைஉண்மைநிலை (Reality) என்பது உண்மையில் இருக்கும் நிலையைக் குறிக்கும். பரந்த பொருளில் இது, பார்க்கக்கூடிய, பார்க்கமுடியாத, உணரக்கூடிய, உணரமுடியாத ஆனால் இருக்கும் எல்லாவற்றையுமே குறிக்கும். ஐரோப்பிய மெய்யியல் நோக்கில் உண்மைநிலை என்பது "வெறுமை" என்னும் கருத்துருவையும் உள்ளடக்கும் ஆயினும், பகுப்பாய்வு மெய்யியல் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. மேற்கத்திய மெய்யியல் உண்மைநிலை என்பதைப் பல மட்டங்களில் நோக்குகிறது. இவை தற்சார்பு (subjective) உண்மைநிலையில் இருந்து கூடிய கடுமையான தோற்றப்பாட்டு உண்மைநிலை (phenomenological reality), உண்மை (truth), fact, மெய்க்கோள் (axiom) போன்ற பலவகையான கருத்துருக்களாக அமைகின்றன. தோற்றப்பாட்டு உண்மைநிலைதனி ஒருவருடைய அனுபவங்கள், அறியும் ஆர்வம், ஆராய்ச்சி, தேர்வு ஆகியவற்றினூடு ஒரு நிகழ்வைப் புரிந்துகொள்வதன் மூலம் தோற்றும் உண்மைநிலை தோற்றப்பாட்டு உண்மைநிலை எனப்படுகிறது. இந்த வரையறை சில சமயங்களில் பிற வகையான உண்மை நிலைகளுக்கும் பொருந்தக் கூடியது ஆயினும், பல வேளைகளில் இது தனித்தன்மையானது. ஒருவருக்கு உண்மைநிலையாகத் தோன்றுவது இன்னொருவருக்கு அவ்வாறு தோன்றாமல் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம். ஆன்மீகம் சார்ந்த உண்மைநிலைகள் பெரும்பாலும் இவ்வகையைச் சார்ந்தவை. தோற்றப்பாட்டியல் நோக்கில் தோற்றப்பாட்டளவில் உண்மையானவை உண்மைநிலை சார்ந்தனவாகவும், "இல்லாதவை" எவையும் உண்மைநிலை சாராதனவாகவும் கொள்ளப்படுகின்றன. உலகப்பார்வைகள் மற்றும் கோட்பாடுகள்"என்னுடைய உண்மைநிலை உங்களுடைய உண்மை நிலை அல்ல" "My reality is not your reality." என்ற ஒரு பொதுவான ஆங்கிலப் பேச்சுவழக்கு பயன்பாட்டில் உண்மை என்பது "உணர்வுகள், நம்பிக்கைகள், மற்றும் யதார்த்தத்தை நோக்கிய மனப்பான்மை" என்பதாகும். [1] .[2] இந்த வாக்கியத்தில் உடன்படுகின்றன அல்லது ஒப்புக் கொள்ளுதல் என்பதைக் குறிக்கும் ஒரு பேச்சுவழியாகவே இது பயன்படுத்தப்படுகிறது, உண்மையானது என்னவென்று ஆழமான மாறுபட்ட கருத்தாக்கங்களைப் பற்றி விவாதிப்பதில்லை. உதாரணமாக, நண்பர்கள் இடையே ஒரு மதம் தொடர்பான விவாதத்தில், ஒருவர் (நகைச்சுவை முயற்சி) "நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கலாம், ஆனால் என்னுடைய உண்மை நிலையைப் பொறுத்தவரையில் அனைவருக்கும் சொர்க்கத்திற்குச் செல்கிறோம்" என்கிறார். இதில் சொர்க்கம் என்ற கருத்து ஒவ்வொருவரின் உண்மைநிலையைப் பொருத்து மாறுபடுவதை அறியலாம். உலகப் பார்வை [3] அல்லது அவற்றின் பாகங்களை (கருத்துருவ கட்டமைப்புகள்) இணைக்கும் வகையில்: உண்மை என்பது அனைத்து விபரங்கள், கட்டமைப்புகள் (உண்மையான மற்றும் கருத்தியல்), கடந்தகால மற்றும் தற்போதைய நிகழ்வுகள் மற்றும் தோற்றப்பாடுகள் ஆகியவை உற்றுநோக்கக்கூடியதா இல்லையா என்பதைப் பற்றியதாக உள்ளது. இது ஒரு உலகளாவிய பார்வை (தனிப்பட்ட அல்லது பகிர்ந்த மனித அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டதா என்பது) இறுதியில் விவரிக்க அல்லது வெளிப்படுத்த முயற்சிக்கின்றது. இயற்பியல், தத்துவம், சமூகவியல், இலக்கிய விமர்சனம், மற்றும் பிற துறைகளில் இருந்து வரும் சில கருத்துக்கள் உண்மை என்பதற்கான பல்வேறு வரையறைகளை கூறுகின்றன. நம்பிக்கை என்பது சாதாரணமாக மற்றும் உண்மையில் நாம் ஒவ்வொரும் உணரும் உண்மை பற்றிய நம்பிக்கைகளுக்கு அப்பால் உணரப்படுவதாக உள்ளது. அத்தகைய மனப்பான்மைகள் பிரபலமான அறிக்கையில் சுருக்கமாக கூறப்படுகின்றன: "உள்ளுணர்தலே உண்மை" அல்லது "வாழ்ககை என்பது உண்மையை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதைப்பொறுத்தது" அல்லது "யதார்த்தம் அல்லது உண்மைநிலை என்பது நீங்கள் செயல்படும் முறை" (ராபர்ட் அன்டன் வில்சன்) வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டாலும், புறநிலை யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது இல்லையா என்பதை பொறுத்து அறியப்படுகிறது. அறிவியல் மற்றும் தத்துவத்தின் பல கருத்துக்கள் பெரும்பாலும் கலாச்சார ரீதியாகவும் சமூகமாகவும் வரையறுக்கப்படுகின்றன. 1962 ஆம் ஆண்டு தாமஸ் குன் அறிவியல் புரட்சியின் அமைப்புகள் என்ற தனது நூலில் விவரித்துள்ளார். [4] பேராசிரியர் பீட்டர் எல். பெர்கர் மற்றும் தாமஸ் லுக்மான் ஆகியோரால் எழுதப்பட்ட “உண்மைநிலையின் சமூக கட்டமைப்பு” என்ற நுலில் அறிவியலின் சமூகவியல் பற்றி விளக்கும் ஒரு புத்தகம், 1966 இல் வெளியிடப்பட்டது.[5] இந்த நூலில் உண்மையில் அறிவைப் புரிந்து கொள்வது மற்றும் உண்மையில் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றைப் பயன்படுத்துவது எப்படி என்று விளக்கினார். அன்றாட வாழ்க்கையின் அனுபவத்தில் எல்லா உணர்ச்சிகளிலும் மிக முக்கியமான ஒன்றாகும், ஏனெனில் நம் நனவுநிலையின் கவனமாக மற்றும் அன்றாட வாழ்க்கையின் அனுபவத்தை முழுமையாக அறிந்திருக்கும் வகையில் இருக்க வேண்டும என வலியுறுத்துகிறது. பண்புகள்உலகளாவிய நிறைபொருள் பிரச்சினைகள் என்பது அண்டவெளி உள்ளதா என்பதைப் பற்றிய மீமெய்யியலின் ஒரு பண்டைய தர்க்கமாகும். பொதுப்பொருள் சார்ந்து ஆண் அல்லது பெண், திட / திரவ / வாயு அல்லது ஒரு குறிப்பிட்ட வண்ணம் போன்ற பொதுவான அல்லது சுருக்க குணங்கள், பண்புகள், வகைகள் அல்லது உறவுகள் பற்றி இவை ஆராய்கின்றன. பங்குபெறுதல் மற்றும் பகிர்ந்து கொள்ளுதல் மூலம் குறிப்பிட்ட தனிநபரைப்பற்றிய அனுமானங்களைக் கண்டறிய முடியும். [6][7] உண்மைநிலை என்பது பல்வேறு வடிவங்களாக உள்ளன. அவற்றுள் இரண்டு பெரிய வடிவங்கள் பிளாட்டோனிக் உண்மைநிலை மற்றும் அரிஸ்டாட்டிய உண்மைநிலை. பிளாட்டோனிக் உண்மைநிலை என்பது உலகளாவிய சுததந்திரமான உண்மை கூறுகள் ஆகும். அரிஸ்டாட்டிய உண்மைநிலை மறுபுறம், உலகளாவிய உண்மை நிகழ்வுகள், அவர்களின் இருப்பு அவர்களுக்கு விளக்கமளிக்கும் விவரங்களை சார்ந்துள்ளது. யதார்த்தம் என்பது உலகலாய உண்மையின் இயல்பான நோக்கங்கள் பற்றி மேற்கண்ட தத்துவங்களில் வெளிப்படுகின்றன. [8] சார்புநிலை மற்றும் கருத்துருவாக்கம் என்பது உலகளாவிய விழிப்புணர்வை எதிர்ப்பதற்கான பிரதான வடிவங்கள் ஆகும். இயற்பியல் அறிவியல்கள்அறிவியல் உண்மைநிலைஅறிவியல் உண்மைநிலை என்பது மிகவும் பொதுவான மட்டத்தில், அறிவியல் பூர்வமாக (ஒருவேளை இலட்சிய விஞ்ஞானம்) விவரித்துள்ள உலகின் பார்வையில் உண்மையான உலகம் பற்றியும் அது என்னவாக இருக்க வேண்டும் என்பதிலிருந்தும் அவற்றின் சுயாதீனமான தன்மையினையும் விவரிக்கும் வகையில் உள்ளது. அறிவியல் தத்துவத்தின் அடிப்படையில் அறிவியலின் தத்துவத்தில், "அறிவியலின் வெற்றி எவ்வாறு விளக்கப்படுகிறது?" என்ற வினாவிற்கு விடையளிக்கும் விதமாக விஞ்ஞானத்தின் வெற்றியைப் பற்றிய விவாதம் விஞ்ஞான கோட்பாடுகளால் நேரடியாக பொருள்படும் படியான வகையில் உள்ளது. பொதுவாக அறிவியல் உண்மைநிலை என்பது அறிவியல் தொடர்பான தத்துவார்த்த அடிப்படையிலான ஆய்வு பற்றி விளக்குகிறது. இயற்பியலில் உண்மைநிலை மற்றும் இடம்இயற்பியலாளர்கள் விவரிக்கும் உண்மைநிலை என்பது மீமெய்யியலில் குறிப்பிடப்படும் உண்மைநிலையிலிருந்து வேறுபட்டது. [9] மனம் சார் உண்மைநிலை என்பது மனதின் சுயாதீன யதார்த்த நிலை ஆகும். ஒரு அளவீட்டு விளைவாக அளவிடக்கூடிய செயலாக இல்லாவிட்டாலும் கூட உண்மைநிலை என்பது பார்வையாளர்களின் உருவகத்தை பொருத்து மாறுபடுகிறது. மனம் சார் உண்மைநிலை மற்றும் இயற்பியல் சார் மெய்நிலைக்குமான தொடர்புகளை பல நிலைகளில் விளக்கலாம். அதேபோல், துணுக்க அமைப்புகளின் மனம்-சுயாதீன பண்புகளை குறிப்பிட்ட மதிப்பீட்டு முறைகளையும் இயற்பியல் உண்மைநிலை கூறுகிறது. [10] மேற்குலக மெய்யியல்மெய்யியலின் தன்மையானது மனம் மற்றும் உண்மையியல் இடையேயான உறவு ஆகியவற்றின் தத்துவத்தின் இரண்டு வெவ்வேறு அம்சங்களை தத்துவம் குறிப்பிடுகிறது. இருப்பு மெய்யியல் என்பது ஒரு பொருள் அது நிலவும் தன்மையை, அதாவது அது இருக்கும் உண்மை நிலை அல்லது இயல்பு நிலைமையை ஆயும் மெய்யியல் பிரிவு ஆகும். இதன்படி மிகவும் பொதுவான வகையிலான விவகாரங்களை விவரிக்கவும், அவை எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகின்றன என்பதை விளக்குகிறது. ஒரு தத்துவவியலாளரின் கருத்தியல் "உண்மைநிலை" ஒரு நேர்மறையான வரையறையை இது விளக்குகிறது. மேலே விளக்கப்பட்டுள்ளபடி, சில தத்துவஞானிகள் உண்மைநிலை மற்றும் இருப்புநிலை ஆகியவற்றுக்கு இடையில் உள்ள வேறுபாட்டைக் காட்டுகின்றனர். உண்மையில், அனேக பகுத்தறிவுமிக்க தத்துவஞானிகள் இன்று, "உண்மையான" மற்றும் "யதார்த்தம்" என்ற சொல்லைத் தவிர்க்க இருப்பு மெய்யியல் என்ற பதத்தை விவாதிக்கின்றனர். ஆனால் தத்துவஞானிகள் "உண்மை" என்று கருதிக் கொள்பவர்களுக்கே "உண்மையானது", பகுப்பாய்வு தத்துவத்தின் முன்னணி கேள்விகளில் ஒன்று என்பது இருப்பு (அல்லது உண்மை) பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதாகும். பகுத்தறிவு தத்துவவாதிகளால் இது ஒரு பொருள் அல்ல என்று பரவலாகக் கருதப்படுகிறது, இருப்பினும் இந்த கண்ணோட்டம் சமீபத்திய தசாப்தங்களில் சில கலங்கள் இழந்துவருகின்றன. அறவியல், இயற்பியல் என்பவற்றைக் கையாளும் உறுதிப்பாட்டியல் (அல்லது "நடுநிலைக் கோட்பாடு") எனப்படும் மெய்யியல் பிரிவு. இது உலகின் இயல்பை அறிந்துகொள்வதற்கான ஒரு துறையாகக் கருதப்பட்டதுடன், மீவியற்பியல், இயற்கை அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கியும் இருந்தது. தற்கால மெய்யியல், பொதுவாக, மீவியற்பியல் (அல்லது "நுண்பொருளியல்"), அறிவாய்வியல், அறவியல், அழகியல் என்னும் பிரிவுகளாக வகுக்கப்படுகின்றது[11]. சுதந்திரமான நம்பிக்கைகள் மற்றும் உள்ளுணர்தல் ஆகியவற்றின் எதார்த்த நிலையே உண்மைநிலை ஆகும். குறிப்பாக, தத்துவஞானிகள் வெளி உலகைப் பற்றி உலகளாவிய அல்லது யதார்த்தத்தைப் பற்றிய உண்மை நிலை பற்றி விளக்குகின்றனர். பொதுவாக எந்தவொரு பொருளின் வகையையும் அடையாளம் காணக் கூடிய வகையில் அங்குள்ள இருப்பு அல்லது அத்தியாவசிய பண்புகள், உணர்வுகள், நம்பிக்கைகள், மொழி, அல்லது வேறு எந்த மனித கலைத்துறையையும் சார்ந்து உண்மைநிலை பற்றி விளக்குகின்றனர். உள்ளுணர்தல்பொது உணர்வு கேள்விகளானது மறைமுகமாக பிரதிநிதித்துவ உண்மைநிலையை தத்துவார்த்த அடிப்படையிலான புரிதலை மனம்சார் நனவு நிலை மற்றம் அனுபவ இயல்பு பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. நமது மூளையில் உள்ள நரம்பியல் செயல்முறைகளால் உருவாக்கப்படும் உலகின் உள் பார்வைக்குரிய நகல் அல்லது உண்மையான உலகம் அல்லது நம்மைச் சுற்றி நாம் பார்க்கும் உலகம் எதைப் பற்றியும் உள்ளுணர்தல் விவரிக்கிறது.[6][7] ஜெயின் தத்துவவியல்ஜெயின் தத்துவவியலில் ஏழு தத்துவங்கள் (சத்தியங்கள் அல்லது அடிப்படைக் கோட்பாடுகள்) உண்மைநிலையை கட்டமைக்கிறது. [12] அந்த ஏழு தத்துவங்களாவன.[13] ஜீவா - நனவைக் குறிக்கும் ஆத்மா அஜீவா - ஆன்மா அல்லாத அஸ்ரவா- செயல் (கர்மா) ஒழுக்கம் பந்தம் - செயல் தொடர்பு சம்வாரா - ஆத்மாவுக்கான செயலை ஊக்குவிப்பதற்கான வழிமுறை நிர்ஜாரா - செயல் (கர்மா) உருவாக்கம் மோட்சம் - விடுதலை அல்லது இரட்சிப்பு அனைத்து கருமத்துடனான தொடர்புகளை முழுமையான அழித்தல் ( குறிப்பிட்ட ஆத்மாவுடன் பிணைத்தல்) மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia