உத்தரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம்
உத்தரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், இந்திய மாநிலமான உத்தரப் பிரதேச அரசு இயக்கும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்தக் கழகம் உத்தரப் பிரதேசம் மட்டுமல்லாது, அருகிலுள்ள மாநிலங்களுக்கும் பேருந்துகளை இயக்குகிறது. கிட்டத்தட்ட 13041[1] பேருந்துகளைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 14 லட்சம் மக்கள் ஒவ்வொரு நாளும் இப்பேருந்துகளில் பயணிக்கின்றனர். இந்தக் கழகத்தின் தலைமையகம் லக்னோவில் உள்ளது. 116 பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ![]() ![]() ![]() பேருந்துகள்மக்களின் வசதிக்காக வெவ்வேறு வகை பேருந்துகளை உத்தரப் பிரதேச மாநில அரசு இயக்குகிறது.
மாவட்டத் தலைநகரங்களில் இருந்து மாவட்டத்தில் உள்ள வட்டத் தலைநகரங்களுக்கும் பிற ஊர்களுக்கும் இயக்கப்படுகின்றன. ஊர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு பயன்படும். குறைவான போக்குவரத்துக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மாவட்டத் தலைநகரங்களில் இருந்து மாவட்டத்தில் உள்ள வட்டத் தலைநகரங்களுக்கும் பிற ஊர்களுக்கும் இயக்கப்படுகின்றன. ஊர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு பயன்படும். இவை ஜனதா வகை பேருந்துகளைக் காட்டிலும் விரைவாகச் செல்லக்கூடியவை.
இவை மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. சாதாரண கட்டணம் பெறப்படுகிறது.
இவை பாய்ண்டு-பாய்ண்டு வகை பேருந்துகளாகும். மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது. சரியான நேரத்தில் புறப்படக் கூடிய பேருந்துகள்
இவ்வகைப் பேருந்துகளில் நீண்ட தொலைவுகளுக்கு பயணிக்கலாம். இவற்றில் இரண்டடுக்குகள் உண்டு
இவை குளிரூட்டி வசதி கொண்டவை. இவ்வகை பேருந்துகள் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன.
வால்வோ வகை பேருந்துகள். தாராளமான இட வசதி கொண்ட இப்பேருந்துகள் மாவட்டத் தலைநகரங்களில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
இவ்வகைப் பேருந்துகள் உலகத் தரம் மிக்கவை. இவை சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்படுகின்றன.
இவை லக்னோ, கான்பூர், ஆக்ரா, வாரணாசி, அலகாபாத், மேரட், பைசாபாத், நொய்டா, மதுரா ஆகிய நகரங்களில் இயங்குகின்றன. இவை ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. சான்றுகள்இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia