உயிரணுக்கொள்கை![]() உயிரணுக்கொள்கை அல்லது கலக்கொள்கை (Cell theory) அனைத்து வகையான உயிரினங்களினதும் அடிப்படையான கட்டமைப்பு மற்றும் தொழிற்பாட்டு அமைப்பு உயிரணு அல்லது கலம் எனும் கருத்தை கூறுகின்றது. இக்கொள்கையின் மேம்பாடு 1600 களின் நடுப்பகுதியில் நுண் நோக்கியலில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக சாத்தியமானது. இக்கொள்கை உயிரியலின் அடிப்படைகளில் ஒன்றாகும். இக்கொள்கையானது புதிய உயிரணுக்கள் முன்பிருந்த உயிரணுக்களிலிருந்தே தோன்றுகின்றன என்றும் அனைத்து உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, மற்றும் ஒழுங்கமைப்பு ரீதியிலான அடிப்படை அலகு உயிரணு என்றும் கூறுகின்றது. வரலாறு![]() 1665 இல் ரொபர்ட் ஊக் (Robert Hooke) இனால் உயிரணு முதன் முதலாகக் கண்டறியப்பட்டது. அவர் தக்கையின் மிக மெல்லிய துண்டுகளை ஆராய்கையில் தேன்கூட்டின் அறைகளைப் போன்ற பெருந்திரளான நுண்ணிய துளைகளை அவதானித்தார். இதனால் ஹுக் அவற்றை உயிரணுக்கள் (செல்கள்) எனப் பெயரிட்டார். எனினும் அவருக்கு அதன் உண்மையான அமைப்பும், தொழிற்பாடும் தெரியவில்லை.[1]. இந்த உயிரணுக்கள் (உண்மையிலேயே அவை உயிரற்ற கலச்சுவர்) பற்றி ஹுக் தனது '"(Micrographia)'" எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.[2]. அவரின் குறிப்பில் அனேகமாக எல்லா உயிரணுக்களிலும் காணப்படும் கரு (nucleus) பற்றியோ, அல்லது மற்றைய புன்னங்கங்கள் (organelles) பற்றியோ குறிப்பிடப்படவில்லை. முதன் முதலாக நுணுக்குக்காட்டியினூடாக உயிருள்ள உயிரணுவை அவதானித்தவர் அன்டன் வான் லீவன்ஹுக் (Antonie van Leeuwenhoek) ஆவார்.[3] அவர் 1674 இல் ஸ்பைரோகைரா, ஒரு பாசியினை அவதானித்து அவற்றை அனிமல்குலேஸ் (animalcules) எனப் பெயரிட்டார். அவர் பெரும்பாலும் பாக்டீரியாவையும் கண்டிருக்கலாம்.[4] உயிரணுக்களை கண்டுபிடிக்க முன்னர் இருந்த உயிர்ச்சக்தி (vitalism) கொள்கைகளை எதிர்ப்பது போன்றே உயிரணுக்கொள்கை இருந்தது. உயிரணுக்களை தனிப்பட்ட அலகுகளுக்கு பிரிக்கலாம் என்ற கருத்தை லுடோல்ப் கிறிஸ்டியன் ற்றேவிரனுஸ் (Ludolpg Chrisitan Terviranus)[5] மற்றும் ஜோஹன்ன் ஜாகப் பால் மொல்தேன்ஹவேர் (Johann Jacob Paul Moldenhawer)[6] ஆகியோர் முன்வைத்தனர். ஊக் (Hooke), லிவேன்ஊக்(Leeuwenhoek), ச்ளிடேன்(Schleiden), ச்வான்(Schwann), வெர்சோ(Virchow) மற்றும் பலரின் அவதானிப்புகள் உயிரணுக்கொள்கையின் வளர்ச்சிக்கு இட்டுச்சென்றது. உயிரணுக்களுக்கும் உயிரினங்களுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் பரவலாய் ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கமே உயிரணுக்கொள்கை. உயிரணுக்கொள்கை உள்ளடுக்குவது:
மரபார்ந்த பொருள்விளக்கம்
நவீன பொருள்விளக்கம்நவீன உயிரணுக் கொள்கையின் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுதிகள் உள்ளடக்குவது:
விதிவிலக்கு
கலங்களின் வகைகள்கலங்களை இரு வகைகளாக பிரிக்கலாம்.
நிலைகருவற்ற உயிர்களிடத்தில் (prokaryotes) உள்ள நகரிழைகள் (Flagella), கணிமி (plasmid) போன்ற அமைப்புகள் நிலைகருவுள்ள உயிர்களிடம் ((Eukaryote)) காணப்படுவதில்லை. விதிவிலக்காக ஒரு உயிரணுவாலான (unicellular) நிலைகருவுள்ள உயிரான 'நுரைமம் அல்லது நொதி' (yeast), 2 micron என்ற கணிமியைக் கொண்டுள்ளது. நிலைகருவுள்ள உயிர்களிடம் (Eukaryote) உள்ள பச்சையவுருமணி, இழைமணி போன்ற கலப்புன்னங்கங்கள் நிலைகருவற்ற உயிர்களிடத்தில் (prokaryotes) இல்லை. இவை இரு உயிர்களில் காணப்படும் றைபோசோம் அளவுகளில் மாற்றங்கள் உள்ளன. நிலைகருவற்ற உயிர்களிடத்தில் 70S றைபோசோமும் நிலைகருவுள்ள உயிர்களிடம் 80S றைபோசோமும் உள்ளன. றைபோசோமில் புரத உற்பத்தி நடைபெறுகிறது. பெரும்பாலும் நோய்களை அழிக்கும் அனைத்து மருத்துகளும் (antibiotics), இப்புரதஉற்பத்தியை தடுத்து, நுண்ணுயிர்களை பல்கிப் பெருக விடாமல் தடுக்கக்கூடியன. நுண்ணுயிர்களின் புரத உற்பத்தி தடுக்கும் நுண்ணுயிர் எதிரிகள் (Antibiotics), ஏன் நமது உடலில் நடைபெறும் புரத உற்பத்தியை தடுக்க முடியவில்லை என வினா எழுகின்றது அல்லவா? இங்குதான் றைபோசோம் அளவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நமக்கு கொடுக்கப்படும் நுண்ணுயிர் எதிரிகள், 70S றைபோசோமில் நடைபெறும் புரத உற்பத்தியை தடுக்க வல்லன. மேலும் நிலைகருவுள்ள உயிர்களிடம் உள்ள பச்சையவுருமணி, இழைமணி போன்றவைகளில் டி.என்.ஏ க்கள் உள்ளன. இவை பச்சையவுருமணி டி.ஏன்.எ என்றும், இழைமணி டி.ஏன்.எ என்றும் அழைக்கப்படும். படிவளர்ச்சி கொள்கையில் இவைகள் நிலைகருவற்ற உயிர்களிடத்தில் இருந்து தோன்றி இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பச்சையவுருமணி நீலப் பாசிகளிடம் இருந்தும், இழைமணி பாக்டீரியாவிடம் இருந்தும் வந்திருக்கக்கூடும். இது அக ஒன்றிய வாழ்வுக் கொள்கை (Endosymbiotic) என அழைக்கப்படும். இக்கொள்கையை உறுதிபடுத்த மேலும் சில சான்றுகள்:
இவற்றையும் பாக்ககுறிப்புகளும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia