உலோ. செந்தமிழ்க்கோதை
உலோ. செந்தமிழ்க்கோதை (22 திசம்பர் 1945 – 1 பெப்ரவரி 2024) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். வாழ்க்கைக் குறிப்புதிருவள்ளூர் மாவட்டம், புச்சிரெட்டிபள்ளி எனும் ஊரில் பிறந்த இவர் பொறியியல் துறையில் அறிவுநுட்பம் வாய்ந்தவராக இருந்தார். கிண்டி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் இளவல் பட்டமும், கோயமுத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 33 ஆண்டுகள் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற இவர் முனைவர் பட்டம் பெற்றவராவார். எழுத்துப் பணிதமிழக அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி வரலாற்றில் அக்கறை கொண்டிருந்தார். இவர் எழுதிய “மக்கள் அறிவியல் இலக்கியம் ; நோக்கும் போக்கும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் பொறியியல், தொழில்நுட்பம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது. அறிவியல் தமிழ் ஆக்கத்தில் கவனம் செலுத்தி, பல கலைச் சொற்களை உருவாக்கினார். பொறியியல், அறிவியல், மக்கள் அறிவியல், அறிவியல் வரலாற்று வரைவியல், மெய்யியல், சமூகவியல் ஆகிய துறைகளிலும் கட்டுரைகள் எழுதினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அறிவியல், தொழில்நுட்ப ஆய்விதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய உலோ. செந்தமிழ்க்கோதை தமிழ் இணையக் கல்விக்கழகம் வெளியிட்ட 14 கலைச்சொல் அகராதி அமைப்பிலும் பங்காற்றினார். எழுதிய நூல்கள்
பெற்ற விருதுகள்
இறப்புஉலோ. செந்தமிழ்கோதை தனது இல்லத்தில் 2024 பெப்ரவரி 1 அன்று காலை பத்து மணிக்கு காலமானார். 2024 பெப்ரவரி 2 அன்று பகலில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia