உள்ளம் கவர்ந்த கள்வன்
உள்ளம் கவர்ந்த கள்வன் (Ullam Kavarntha Kalvan) என்பது 1987 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும்.[1] 1976 இல் வெளிவந்த சிச்சோர் என்ற இந்தி திரைப்படத்தின் மறுஆக்கமான, இத்திரைப்படத்தில் பாண்டியராஜன், நிழல்கள் ரவி, ரேகா ஆகியோர் நடித்திருந்தனர். வி.கே.ராமசாமி மனோரமா ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். பஞ்சு அருணாசலம் இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். அசோக் குமார் ஒளிப்பதிவு மேற்கொண்டார். இப்படம் 1987 செப்டம்பர் 4 அன்று வெளியானது. நடிகர்கள்
தயாரிப்புஉள்ளம் கவர்ந்த கள்வன், சிச்சோர் என்ற இந்தித் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். தூயவன் தயாரித்த கடைசித் திரைப்படமாகும். திரைப்படப் பணிகள் முடியும் நிலையில் இருந்தபோது, 1987 சூலை 11 அன்று அவர் இறந்தார்.[2] பாடல்கள்இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3][4] கஃப்போசுட்டின் இராஜேஷ் இராஜாமணி, "நாடிருக்கும்" என்ற பாடலை ஒரு இணைவுப் பாடலாக உணர்கிறார்.[5] இப்பாடல் சங்கராபரணம் என்ற கர்நாடக ராகத்தில் அமைக்கப்பட்டது.[6]
வெளியீடும் வரவேற்பும்உள்ளம் கவர்ந்த கள்வன் 1987 செப்டம்பர் 4 அன்று வெளியானது.[7] இந்தியன் எக்ஸ்பிரஸ் "எளிய மெல்லிய" கதையை விமர்சித்தது. ஆனால் அசோக் குமாரின் ஒளிப்பதிவை பாராட்டியது.[8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia