எங்கிட்ட மோதாதே
எங்கிட்ட மோதாதே (Enkitta Mothathe) ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் ராஜேஷ்வரி சுந்தர்ராஜன் தயாரிப்பில் 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படமாகும்.[1] விஜயகாந்த், ஷோபனா, சரத்குமார் மற்றும் குஷ்பூ ஆகியோர் முதன்மை கதாபாத்திரம் ஏற்றிருந்தனர். இளையராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2][3] இப்படத்தின் தலைப்பு ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய முந்தைய படமான ராஜாதி ராஜா திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் முதல் வரியில் இருந்து எடுக்கப்பட்டது.[4][5] வியாபார ரீதியாகப் படம் வெற்றிபெறவில்லை.[6] கதைசரோஜா பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். இதற்கிடையில், மல்லிகா என்ற திமிர் பிடித்த பணக்காரப் பெண்ணும் பாண்டியனைக் காதலித்து, சரோஜாவுக்கும் அவனுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தத் திட்டமிடுகிறாள். மல்லிகா தனது முயற்சியில் வெற்றி பெறுவாரா இல்லையா என்பதுதான் கதையின் உச்சம். நடிகர்கள்
பாடல்கள்இளையராஜா இசையமைக்க பாடல்களை வாலியும், புலமைப்பித்தனும் எழுதியிருந்தனர்.[7] இப்படத்தில் இடம் பெற்ற சரியோ சரியோ" பாடல் மலையாளத் திரைப்படமான அதர்வம் படத்தில் வரும் "புகழோரத்தில்" பாடலின் மறுபதிப்பாகும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia