எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோயில்
எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி பகுதியின் எமனேசுவரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[2][3] கடல் மட்டத்திலிருந்து சுமார் 89 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9°32′47″N 78°36′02″E / 9.5464°N 78.6006°E ஆகும். இக்கோயிலில் மூலவர் வரதராஜ பெருமாள் மற்றும் தாயார் பெருந்தேவி ஆவர். இக்கோயிலின் தலவிருட்சம் அரசமரம்; தீர்த்தம் வைகை ஆகும். பாஞ்சராத்ரம் முறைப்படி இக்கோயிலில் பூசைகள் நடத்தப்படுகின்றன. கருவறை விமானம் புண்ணியகோடி விமானமாகும். வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், சீனிவாசப் பெருமாள், அலர்மேல்மங்கை தாயார், சக்கரத்தாழ்வார் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[4] கோயில் கும்பாபிசேகம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி ஆறாம் நாள் நடைபெற்றது.[5] வைகாசி பிரம்மோற்சவம் மற்றும் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.[6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia