இராமநாதபுரம் மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் (Ramanathapuram district) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் இராமநாதபுரம் ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4068.31 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே பாக் நீரிணையும், வடக்கில் சிவகங்கை மாவட்டமும், வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், தெற்கில் மன்னார் வளைகுடாவும், மேற்கில் மதுரை மாவட்டமும் தென்மேற்கில் தூத்துக்குடி மாவட்டமும் அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தலமாக கருதப்படும் இராமேஸ்வரம், இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது. வரலாறு1910ஆம் ஆண்டில், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து சில பகுதிகளை பிரித்து இணைத்ததால் இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திரு. ஜெ. எப். பிரையன்ட், ஐ.சி.எஸ் முதல் மாவட்ட ஆட்சியராக இருந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மாவட்டம் இராம்நாட் (Ramnad) என அழைக்கப்பட்டது. இந்தப்பெயர் சுதந்திரத்திற்குப்பிறகும் தொடர்ந்தது. பின்னர் தமிழ் மரபிற்கு ஏற்ப இராமநாதபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இராமநாதபுரம், முகவை மாவட்டம்[1] என்றும் அழைக்கப்படுகிறது. வைகை ஆறு, பாக்கு நீரிணையில் தன் பயணத்தை முடிப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. மார்ச் 15, 1985 ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது:
2018இல் இராஜசிங்கமங்கலம் என்ற புதிய தாலுகா உருவாக்கப்பட்டது. 2019இன் நிலவரப்படி, இராமநாதபுரம் மாவட்டமானது கடலாடி, கீழக்கரை மற்றும் இராஜசிங்கமங்கலம் ஆகிய மூன்று வட்டங்களையும் சேர்த்து மொத்தம் ஒன்பது வட்டங்கள் கொண்டது.[2] மாவட்ட வருவாய் நிர்வாகம்இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி ஆகிய 2 வருவாய் கோட்டங்கள் உள்ளது. இராமநாதபுரம் வருவாய்க் கோட்டத்தில் 5 வருவாய் வட்டங்களும், பரமக்குடி வருவாய்க் கோட்டத்தில் 4 வட்டங்களும் உள்ளன. இந்த 9 வருவாய் வட்டங்களில் 38 உள்வட்டங்களும், 400 வருவாய் கிராமங்களும் உள்ளது.[3] இராமநாதபுரம் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்பரமக்குடி கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்உள்ளாட்சி நிர்வாகம்இராமநாதபுரம் மாவட்டம் 4 நகராட்சிகளும், 7 பேரூராட்சிகளும் கொண்டது.[4] நகராட்சிகள்பேரூராட்சிகள்ஊரக வளர்ச்சி நிர்வாகம்இம்மாவட்டம் ஒரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும், 11 ஊராட்சி ஒன்றியங்களும், 429 கிராம ஊராட்சிகளும் கொண்டது.[10] ஊராட்சி ஒன்றியங்கள்இராமநாதபுரம் மாவட்டத்தின் 11 ஊராட்சி ஒன்றியங்கள்.
மக்கள்தொகை பரம்பல்மதவாரியான கணக்கீடு (2011) இந்துக்கள் (77.39%) முஸ்லிம்கள் (15.37%) கிறித்தவர்கள் (6.73%) மற்றவை (0.50%)
4068.31 ச.கி.மீ பரப்பளவு கொண்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 13,53,445 ஆகும். அதில் ஆண்கள் 682,658 ஆகவும்; பெண்கள் 670,787 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 13.96% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 330 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 80.72% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 140,644 ஆகவுள்ளனர்.[12] இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 77.39% ஆகவும், கிறித்தவர்கள் 6.73% ஆகவும், இசுலாமியர்கள் 15.37 % ஆகவும், மற்றவர்கள் 0.50% ஆகவும் உள்ளனர். அரசியல்சட்டமன்றம்இம்மாவட்டம் பரமக்குடி, திருவாடனை, இராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் என 4 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது.
மக்களவைஇம்மாவட்டம் ஒரு மக்களவைத் தொகுதியை கொண்டுள்ளது.
தீவுகள்மாநிலத்திலேயே அதிக அளவில் தீவுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அவற்றில் சில:
ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்ஆன்மிகத் தலங்கள்
சுற்றுலாத் தலங்கள்![]() ![]()
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia