முகம்மது எகுத்தார் ஹாஜியார் மகரூப் (Mohamed Ehuttar Hadjiar Maharoof, 5 சனவரி 1939 - 20 சூலை 1997) இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
மகரூப் 1939 சனவரி 5 இல் இலங்கையின் கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் பிறந்தார்.[1][2] இவரது தந்தை கிண்ணியா கிராமசபைத் தலைவராக இருந்தவர். சகோதரர் எம். ஈ. எச். முகம்மது அலி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.[2] மாத்தளை சாகிரா கல்லூரி, கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, கண்டி புனித அந்தோனியார் கல்லூரி, கொழும்பு பெம்புரோக் அகாதமி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.[2]
மகரூப் திருகோணமலை மாவட்டத்தில்தமிழர்களுடன் சிறந்த புரிந்துணர்வைக் கொண்டிருந்தார். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சி உருவாக்கத்தையும், முசுலிம்களுக்கு என தென்கிழக்கு மாகாணசபை உருவாக்கத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.[10][11] 1997 சூலை 20 காலையில் மகரூப் பயணம் செய்த வாகனம் இறக்கண்டி செல்லும் வழியில் குச்சவெளி வீதியில் திருகோணமலைக்கும்நிலாவெளிக்கும் இடையில் 6 ஆம் மைல் கட்டையடியில் வைத்து கண்ணிவெடி ஒன்றில் சிக்கியதில் மகரூப் கொல்லப்பட்டார்.[12][13] அவருடன் மேலும் ஐவரும் (ஓட்டுனர், பாதுகாப்பு அதிகாரி, நண்பர், பாடசாலை அதிபர் ஒருவர், சாரதியின் 5 வயது மகன்) கொல்லப்பட்டனர்.[12][13]விடுதலைப் புலிகளே இத்தாக்குதலை மேற்கொண்டதாக பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டது.[14][15]
↑de Silva, W. P. P.; Ferdinando, T. C. L. 9th Parliament of Sri Lanka(PDF). Associated Newspapers of Ceylon Limited. p. 215. Archived from the original(PDF) on 2015-06-23. Retrieved 2015-08-23.