எர்ணாகுளம் (Ernakulam) கேரள மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். எர்ணாகுளம் மாவட்டத்தின் ஒரு பகுதியான இது கொச்சி பெருநகர்ப் பகுதியின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. கொச்சி நகரின் கிழக்குப் பகுதி முக்கியமாக எர்ணாகுளம் என்றும், வெந்துருத்தி பாலத்திற்குப் பிறகு இருக்கும் மேற்குப் பகுதி மேற்கு கொச்சி என்றும் அழைக்கப்படுகிறது.[1] எர்ணாகுளம் என்ற பெயர் சிவபெருமான் பெயரான இறையனார் குளம் என்பது மருவி எர்ணாகுளத்து அப்பன் என்ற பெயரில் இருந்து வந்ததாக அறியலாம். வர்த்தகத் தலைநகராக விளங்கும் எர்ணாகுளத்தில்தான் கேரள மாநிலத்தின் உயர்நீதிமன்றம் அமைந்துள்ளது.