எஸ். எம். நாயகம்எஸ். எம். நாயகம் என அறியப்பட்ட சுந்தரம் மதுரநாயகம் சிங்கள திரைப்படங்களின் முன்னோடி ஆவார். முதலாவது சிங்கள பேசும் படமான கடவுனு பொறந்துவ என்ற திரைப்படத்தைத் தயாரித்தவர் இவரே.[1] தொழில் வாழ்க்கைஇந்தியாவிலுள்ள மதுரையை பிறப்பிடமாகக் கொண்டவர். சோப், வாசனைத்திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வந்தார். இவரது தொழிற்சாலைகள் இந்தியாவிலும், அந்நாளைய பிரித்தானிய இலங்கையிலும் அமைந்திருந்தன. 1940 களில் இந்தியாவில் திரைப்படத் தொழில் மிகவும் விரிவடைந்து வளர்ந்து வந்தது. நாயகம் மதுரையில் ஸ்ரீ முருகன் நவகலா லிமிடெட் என்ற திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். அத்துடன் மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் சித்ரகலா மூவிடோன் என்ற படப்பிடிப்பு நிலையத்தையும் நிறுவினார். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக 1946 ஆம் ஆண்டு குமரகுரு என்ற திரைப்படம் தயாரித்து வெளியிடப்பட்டது. அடுத்த ஆண்டு தாய் நாடு என்ற திரைப்படத்தைத் தயாரித்து இந்தியா சுதந்திரமடைந்த 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் வெளியிடப்பட்டது. எஸ். எம். நாயகத்தின் கூற்றுப்படி அவரது சிங்கள நண்பர்கள் தமிழ், இந்திப் படங்களைப் பார்த்துக் களிப்புற்ற அதே வேளை, தமது சொந்த மொழியில் திரைப்படங்கள் இல்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்களாம். ஆகவே, நாயகம் ஒரு சிங்கள திரைப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார்.[2] கடவுனு பொறந்துவபல கதைகளைப் பரிசீலித்தபின், இலங்கையில் வெற்றிகரமாக மேடையேற்றப்பட்ட ஒரு நாடகமான கடவுனு பொறந்துவ என்ற நாடகத்தின் கதையை வாங்கினார். திரைப்படம் மதுரையில் தயாரானது. தொழிநுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தியர்கள். நடிகர், நடிகைகள் இலங்கையிலிருந்து வந்தார்கள். இந்தப் படம் இலங்கை கொழும்பிலுள்ள கிங்ஸ்லி தியேட்டரில் திரையிடப்பட்டது. முதற்காட்சிக்கு அப்போது இலங்கை அமைச்சரவையில் முதன்மை அமைச்சராகவிருந்த டி. எஸ். சேனநாயக்கா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இவரே பிற்காலத்தில் இலங்கையின் முதல் பிரதமர் ஆனார்.[2] தயாரித்த திரைப்படங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia