தாய்நாடு (1947 திரைப்படம்)
தாய்நாடு (Thaai Nadu) என்பது 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாட்லிங் மணி, எஸ். டி. வில்லியம்ஸ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] நடிப்புஇந்தப் பட்டியலானது பிலிம் நியூஸ் ஆனந்தனின் தரவுத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.[2]
தயாரிப்புஇத்திரைப்படத்தை முதன்முதலில் சிங்கள மொழி பேசும் படமான கடவுனு பொறந்துவவைத் தயாரித்த எஸ். எம். நாயகம் தனது சொந்த பதாகையான சித்ரகலா மூவிடோனின் கீழ் தயாரித்தார். படத்தை டி. எஸ். மணி இயக்கினார்.[1] டி. எஸ். மணி கதை திரைக்கதையை எழுத, உரையாடலை டி. வி. நடராஜசாமி எழுதினார். ஜி. ஜி. சித்தி ஒளிப்பதிவு செய்ய, ஆபிரகாம் படத்தொகுப்பை மேற்கொண்டார். கோட்வான்கர் கலை இயக்கத்தை மேற்கொள்ள, ஒளிப்படங்களை வி. வி. ஐயர் எடுத்தார்.[2] பாடல்கள்இப்படத்திற்கு இசையமைத்தவர் ஆர். நாராயண ஐயர், பாடல் வரிகளை டி. வி. நடராஜ சாமி எழுதினார்.
வரவேற்புஇப்படம் குறித்து 2017 இல் ஊடகவியலாளர் டி. பி. எஸ்.ஜெயராஜ் எழுதுகையில், "படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது" என்று கூறினார்.[1] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia