ஏக்நாத் கெயிக்வாட்
ஏக்நாத் கெய்க்வாட் (Eknath Gaikwad) (1 ஜனவரி 1940 - 28 ஏப்ரல் 2021) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர், பதினான்காவது மக்களவையிலும், பதினைந்தாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார். இவர் 2021இல் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இறந்தார்.[1] சொந்த வாழ்க்கைகெய்க்வாட் ஒரு மராத்திய பௌத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.[2] [3] இவரது மகள் வர்ஷா கெயிக்வாட் மகாராட்டிர சட்டமன்றத்தில் நான்கு முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டர். மகாராட்டிராவின் தற்போதைய அமைச்சரவையில் அமைச்சராகவும் உள்ளார்.[2] [4] தொழில்ஏக்நாத் ஹெயிக்வாட், தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2014இல் நடைபெற்ற தெர்தலில் ராகுல் செவாலியிடம் தோல்வியடைந்தார். இவர் தாராவியிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு முறை மகாராட்டிர மாநில அமைச்சரவையின் மாநில அமைச்சராகவும் இருந்துள்ளார். 1985 முதல், இவர் தாராவியை பிரதிநிதித்துவப்படுத்தினார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia