ஏழில் நெடுவரைஏழில் நெடுவரையானது ஏழில் குன்றம் என்னும் பெயராலும் சங்கநூல்களில் குறிப்பிடப்படுகிறது. இது இக்காலத்தில் கேரளமாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது. இதன் இக்கால வழக்குப்பெயர் எழில்மலை.[1] ஆனைமலைக் குன்றுகளில் ஒன்று பழனி. இக்காலத்தில் இப்பெயரால் வழங்கப்படும் இந்த ஊர் சங்க காலத்தில் பொதினி என வழங்கப்பட்டது. இது முருகன் தலைபோல் ஆறு குன்றுமுகடுகளை உடையது. ஆறு குன்றுகளைக் கொண்டது.[2] பொதினியின் ஆறு முகடுபோல் ஏழு-முகடுகளைப் பெற்றிருக்கும் மலை ஏழில் குன்றம். ஏழில்குன்றம் என்பது எழில்குன்றம் எனத் திரிந்து, இப்போது ‘எலிமலை’ என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. இது கொண்கான நாட்டின் ஒரு பகுதி. எருமைமாடுகள் மிகுதி. [3] இங்கு யானைகள் மிகுதி.[4] பாழிச்சிலம்பு என்னும் மலைக்காடுகளும் இதன் பகுதியாகும். இந்த மலைப்பகுதி நாட்டைச் சங்க காலத்தில் நன்னன் என்பவன் ஆண்டுவந்தான். இவன் யானைகளைப் பரிசாக நல்கும் வள்ளண்மைக் குணம் உள்ளவன். அவனது தலைநகர் பாரம்.[5] இங்குக் கொற்றவை கோயில் ஒன்று இருந்தது. இந்தக் கானமர் செல்வியின் புகழைச் சங்ககாலப் புலவர்களில் ஒருவர் சிறப்பித்துப் பாடியிருந்தார். அந்தப் பாடலோ, பாடிய புலவரின் பெயரோ நமக்குக் கிடைக்கவில்லை.[6] இந்தப் பேய்த்தெய்வத்துக்குத்தான் மிஞிலி என்பவன் அதிகன் என்பவனைப் பலிகொடுத்தான். அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia