ஏ.வி.எம். கால்வாய்அனந்த விக்டோரியா மார்த்தாண்டவர்மன் கால்வாய் என்பதைச் சுருக்கமாக ஏ.வி.எம். கால்வாய் (A.V.M Canal) என்று கூறுகின்றனர். இந்த கால்வாயின் முக்கிய நோக்கம், திருவிதாங்கூர் நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தையும், நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியையும் நீர்வழித் தொடர்புக்காக இணைப்பது ஆகும். வரலாறுஇது உத்தரம் திருநாள் மார்த்தாண்ட வர்மர் (1846-1860) என்பவரால் தொடங்கப்பட்டது. மன்னர் 1860 ல் இறக்கவே, அவரது வாரிசு மன்னரான ஆயிலியம் திருநாள் ராமவர்மன் (1860-1880) இப்பணியைத் தொடர்ந்தார். இதன் முதல் கட்டமாக பூவாறில் இருந்து தேங்காய்ப்பட்டணம், தாமிரபரணி நீர்தேக்கம் வரை சுமார் 10 கல் தூரம் வெட்டப்பட்டு 1864 பெப்ரவரி மாதம் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கால்வாய் குளச்சல் அருகில் உள்ள மண்டைக்காடு பொன்னம்மை நாடாத்தி கோயில் வளாகம் வரை வெட்டப்பட்டது. 1867 ல் இத் திட்டம் பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது. அன்று திவானாக இருந்த சர். மாதவராவ் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
வர்கலை காலவாய் பணி தொடங்கிவிட்டதால் எ.வி.எம். காலவாய் பணியை அரசு நிறுத்திவிட்டது. கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரையிலும், அங்கிருந்து கொல்லம் வரையிலும், அங்கிருந்து கொச்சி வரையிலும் நீர்வழிப் போக்குவரத்திற்காக தொடங்கப்பட்ட இக் கால்வாய் பணப் பற்றாக்குறை காரணமாக தடைப்பட்டது. இரண்டாவது ஐந்து ஆண்டுத் திட்டத்திலும் இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது[2]. மக்கள் கோரிக்கைகள்
போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மற்றும் அரசியல் வாதிகள் போராடி வருகின்றனர். மேற்கூறிய கோரிக்கைகள் ஒருபுறம் இருக்க மற்றுமொரு சாரார் தங்களின் முறைப்படி பட்டா நிலமாக்கப் பட்ட நிலம் மற்றும் வீடு ஆகியவைகள் பாதிக்கப் படும் பட்சத்தில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வதுடன் தங்களுக்கு மாற்று நிலம், வீடு மற்றும் நஷ்ட ஈடு தர அரசு தரப்பில் கோரிக்கையும் விடுத்துள்ளனர். இக்கால்வாய் திட்டத்தின் பயன்கள்
இக்கால்வாய் திட்டத்தால் வரும் பாதிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia