ஐஆர்என்எஸ்எஸ்-1எச்
ஐஆர்என்எஸ்எஸ்-1எச் (IRNSS-1H) இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்புத் (IRNSS) தொடர் செயற்கைக்கோள் வரிசையில் எட்டாவது செயற்கைக்கோள் ஆகும். இதற்கு முந்தைய ஏழு செயற்கைகோள்கள்: இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1ஏ, இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1பி, இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1சி, இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1டி, இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1இ, இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1எஃப் மற்றும் இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1ஜி. ஐஆர்என்எஸ்எஸ்-1எச், இந்தத் தொடரின் கல இயக்க கடைசி ஏவூர்தி ஆகும். இந்த செயற்கைக்கோளானது புவி ஒத்தியக்கப்பாதையில் நிலைநிறுத்தப்பட இருந்தது. இந்த செயற்கைக்கோளானது, பி.எஸ்.எல்.வி.சி- 39 ராக்கெட் மூலம் திட்டமிட்டபடி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஆகத்து 31 ஆம் தேதி செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இம்முயற்சி தோல்வியடைந்தது [2][3] இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் கிரண்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, செயற்கைக்கோளுக்குப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வெப்பத்தடுப்பு அமைப்பு சரியாகப் பிரியாததால் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் தோல்வி அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், ஏவூர்தியின் நான்கு நிலைகளில் 3 நிலைகள் நன்கு செயல்பட்டதாகவும். 4-வது நிலையில் வெப்பத்தடுப்பு அமைப்பு சரியாகப் பிரியாததால் செயற்கைக்கோள் நிலை நிறுத்துவதிலும், தொழில் நுட்ப கோளாறு காரணமாகவும் தோல்வி அடைந்ததாகவும், இதனால் திட்டமிட்டபடி 19 நிமிடத்தில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த முடியாமல் போய்விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia