வம்சத்தின் முதல் மன்னரான சந்திரதேவன், கி.பி 1090 -க்கு முன்னர், காலச்சூரி அதிகாரத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு இறையாண்மை கொண்ட அரசை நிறுவினார். இவரது பேரன் கோவிந்தச்சந்திரனின் கீழ் இராச்சியம் அதன் உச்சத்தை அடைந்தது. அவர் சில கலாச்சூரி பிரதேசங்களை இணைத்து, கசனவித்துகளின் தாக்குதல்களைத் தடுத்து, பாலர்களுடன் போரிட்டார். கி.பி.1194 -இல், கோவிந்தச்சந்திரனின் பேரன் செயச்சந்திரன்கோரிகளால் தோற்கடிக்கப்பட்டார். இது வம்சத்தின் ஏகாதிபத்திய அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. 12 ஆம் நூற்றாண்டில் ஜெயச்சந்திரனின் வாரிசுகள் தில்லி சுல்தானகத்தால் தோற்கடிக்கப்பட்டபோது இராச்சியம் இல்லாமல் போனது.
Deepak Yadav (2011). "Aspects of rural settlement under the Gahadavala dynasty: c. 11th century CE to 13th century CE (An inscriptional analysis)". Proceedings of the Indian History Congress72 (1): 360–367.
Saurabh Kumar (2015). "Rural Society and Rural Economy in the Ganga Valley during the Gahadavalas". Social Scientist43 (5/6): 29–45.