கடச்சனேந்தல்
கடச்சனேந்தல் (ஆங்கிலம்: Kadachanendhal) என்பது இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4] கடைச் சிலம்பு ஏந்தல் என்ற பெயரே மருவி கடச்சனேந்தல் என்றாகி விட்டது. சிலப்பதிகாரத்தில், கோவலன் மற்றும் அவரது மனைவி கண்ணகி, சமணத் துறவி கவுந்தியடிகளால் மதுரைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, முதல் நாள் தங்க வைக்கப்பட்ட இடமே இந்த கடச்சனேந்தல் ஆகும்.[5] மதுரையிலிருந்து அழகர்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ள கடச்சனேந்தல் பகுதிக்கு அருகில் ஒவ்வோர் ஆண்டும் சூன் மாதம் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கி மனதுக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும்.[6] கடல் மட்டத்திலிருந்து சுமார் 187 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கடச்சனேந்தல் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 9°58′39″N 78°10′13″E / 9.9776°N 78.1703°E ஆகும். மதுரை, மூன்றுமாவடி, அப்பன்திருப்பதி, கோ. புதூர், பீபி குளம், ஊமச்சிகுளம், யா. ஒத்தக்கடை, தல்லாகுளம், கே. கே. நகர், கோரிப்பாளையம் மற்றும் மாட்டுத்தாவணி ஆகியவை கடச்சனேந்தல் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும். புனித அந்தோணியார் தேவாலயம் ஒன்று கடச்சனேந்தல் பகுதியில் அமைந்துள்ளது.[7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia