கடுக்காய்
கடுக்காய் (ⓘ) (Terminalia chebula) என்பது ஒருவகை மரமாகும். இது தெற்காசியாவிலிருந்து பாக்கித்தான், இந்தியா, நேபாளத்திலிருந்து கிழக்கே தென்மேற்கு சீனா (யுன்னான்) மற்றும் தெற்கே இலங்கை, மலேசியா வியட்நாம் வரை காணப்படுகிறது.[1] சித்த மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துப் பொருட்களில் இது ஒன்று.[2]திருக்குறுக்கைவீரட்டம் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது கடுக்காய் மரமாகும்.[3] ![]() வகைபிரித்தல்ஸ்வீடிய இயற்கை ஆர்வலர் ஆண்டர்ஸ் ஜஹான் ரெட்சியஸ் அப்சர்வில் இந்த இனத்தை விவரித்தார்.[4] இதில் பல வகைகள் அறியப்படுகின்றன, அவை:[1]
மருத்துவப் பயன்கள்கடுக்காய் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய சுவைகள் அடங்கியதாகும். கடுக்காய் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது வாய், தொண்டை இரைப்பை, குடல், கல்லீரல் போன்றவற்றின் ஆற்றலைக் கூட்டுவதாகக் கூறப்படுகிறது. இது பசியைத் தூண்டுவதாகவும், வாதம் ,பித்தம், கம் ஆகிய முன்றையும் சமநிலைப் படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இது இளைப்பு நோய் வராமல் காக்கக்கூடியது என்றும் கூறப்புகிறது.[5] மேற்கோள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia