கண்ணாபட்டி விசுவநாதர் கோயில்
கண்ணாபட்டி விசுவநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தின் கண்ணாபட்டி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2] கடல் மட்டத்திலிருந்து சுமார் 257 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கண்ணாபட்டி விசுவநாதர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°06′24″N 77°46′45″E / 10.106755°N 77.779255°Eஆகும். இக்கோயிலில் மூலவர் விசுவநாதர் மற்றும் தாயார் விசாலாட்சி ஆவர். இக்கோயிலின் தீர்த்தம் உத்தரவாகினி; தலவிருட்சம் வில்வமரம் ஆகும். காரணாகம முறைப்படி பூசைகள் செய்யப்படுகின்றன. விசுவநாதர், விசாலாட்சி, சங்கரலிங்கம் , தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஐயப்பன், சூரியன், சந்திரன், காலபைரவர், நவக்கிரகங்கள் மற்றும் அஷ்ட நாகர்கள் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[3] மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஆடிக் கிருத்திகை, வைகாசி விசாகம், நவராத்திரி மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia