கனிச்சாறு (நூல்)
பாவலரேறு பெருஞ்சித்திரனார் தம் இளமைக் காலத்திலேயே தமிழரின் மொழி, இன, நாட்டு நலக்கொள்கையைப் பின்பற்றிச் செயற்படத் தொடங்கினார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் மாணவராக இருந்து தமிழில் புலமை கைவரப்பெற்றுப் பாவாணரைத் தமிழுலகம், மொழியியல் உலகிற்கு உயர்த்திக் காட்டியதில் பெரும்பங்கு அவருக்கு உண்டு. ‘தென்மொழி’ என்ற தனித்தமிழ் இதழ் ஒன்றை நடத்தித் தனித்தமிழ்க்கொள்கை தொடரவும் வெற்றிபெறவும் செய்தார். அதனால் உலகமுழுவதும் தன்னறிமுகமும் பாராட்டுதலும் கிடைத்தது. தம் வாழ்நாள் முழுவதும் உணர்வான பாடல்களை எழுதித் தமிழினத்திற்கு தன்னுணர்வு, விழிப்புணர்வு ஊட்டியவர். தமிழனுக்கு ஒரு சொந்த நாடு கிடைக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர். தனித்தமிழ் நாட்டுக் கொள்கையுடையவர். வாழ்க்கை முழுவதும் தாம் கொண்ட கொள்கைக்காகச் சொற்பொழிவு, இதழ்ப்பணி, போராட்டம் எனப் பலமுறைகளில் ஈடுபட்டு, பலமுறை சிறை சென்றுள்ளார். அவர்தம் வாழ்நாள் முழுவதுமான பாடல்கள் எட்டு தொகுதிகளாகக் தொகுக்கப்பட்டு, அவரின் 80 - ஆம் ஆண்டில் வெளிவருகிறது. இவரது படைப்புகள் அனைத்தும், நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. அவற்றில் இக்கனிச்சாறும் ஒன்றாகும். தொகுதி - 4கீழ்கண்ட 'குழந்தை' என்ற கவிதை அவரது நான்காம் தொகுதியில், பக்கம்-59இல் காணப்படுகிறது. குழந்தை...! |
Portal di Ensiklopedia Dunia