கரண் நகர்
கரண் நகர் (Karan Nagar) இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள சம்மு மற்றும் காசுமீர் மாநிலத்தில் உள்ள சிறீநகர் நகரத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும். திவான் பாக் என்ற பெயரில் கரண் நகரின் ஒரு பகுதியானது 1942 ஆம் ஆண்டில் சம்மு மற்றும் காசுமீர் (இளவரசர் மாநிலமான) முன்னாள் சமத்தான மாநில அரசால் அறிவிக்கப்பட்ட முதல் குடிமக்கள் காலனி ஆகும். ஸ்ரீநகர் நகரம் ஒரு ஆடம்பரமான பகுதியாகும். வரலாறுஇருபதாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தில் அவர்கள் நாடு கடத்தப்படுவதற்கு முன்பு காஷ்மீர பண்டிதர்கள் மூலம் அதிகமான மக்கள்தொகையை இந்த நகரம் கொண்டிருந்தது. "கரண்" என்ற பெயரால் இந்த நகரம் அழைக்கப்பட்டது. மக்கள்தொகையியல்காசுமீரி என்பது அப்பகுதியில் உள்ள உள்ளூர் மொழியாகும். மேலும் மக்கள் ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளையும் அப்பகுதியின் அதிகாரப்பூர்வ மொழிகளாகப் பயன்படுத்துகின்றனர். புவியியல்கரண் நகர் பகுதி மாவட்டத் தலைமையகமான சீறீநகருக்கு வடக்கே 34°04′45″N 74°47′56″E / 34.0791°N 74.799°E 2 கி.மீ (1.2 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. தெற்கில் ஆலி கடல், மேற்கில் பட்மலூ என்ற நகரம், வடக்கில் சஃபா கடல் மற்றும் கிழக்கில் நவாபசார் போன்றவை எல்லைகளாக உள்ளன. கரண் நகர் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 1592 மீ (5223 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia