கருஞ்சிவப்பு வால் வானம்பாடி
கருஞ்சிவப்பு வால் வானம்பாடி (Rufous-tailed lark)(அம்மோமனேசு பீனிகுரா) என்பது இந்தியாவிலும் பாக்கித்தானிலும் உலர்ந்த திறந்தவெளி வாழ்விடங்களில் காணப்படும் ஒரு தரைப் பறவையாகும். இந்த பேரினத்தில் உள்ள மற்ற உயிரினங்களைப் போலவே, இதன் மேல் தாடை வரை சற்று வளைந்த விளிம்புடன் பெரிய அலகினைக் கொண்டுள்ளது. புல் விதைகள், தானியங்கள் மற்றும் பூச்சிகளைத் தீவனமாகத் தேடுவதால் மந்தமான பழுப்பு நிற மண்ணுடன் பொருந்தும் வண்ணத்துடன் காணப்படும். களத்தில் ஆண் மற்றும் பெண் குருவிகளைப் பிரித்தறிய முடியாது. ஆனால் இனப்பெருக்க காலத்தில், ஆணில் இனப்பெருக்க வேறுபாடு காணப்படுகிறது. ஆண் இக்காலத்தில் செங்குத்தாக மேலே பறந்து பின்னர் கரணம் போடும். இவை இணையாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ தரையில் உணவு உண்ணுகின்றன. வகைப்பாட்டியல்கருஞ்சிவப்பு வால் வானம்பாடி முதலில் மிராப்ரா பேரினத்தில் வைக்கப்பட்டது.[2] துணை இனங்கள்கடந்த காலத்தில் சில வகைபாட்டியல் வல்லுநர்கள் வரி-வால் வானம்பாடியினை கருஞ்சிவப்பு வால் வானம்பாடியின் துணையினமாகச் சேர்த்துள்ளனர். ஆனால் இரண்டும் தற்போது தனித்தனி சிற்றினங்களாகக் கருதப்படுகின்றன.[3] வால்டர் கோயல்ஸ் தீபகற்ப இந்தியாவில் இந்த வானம்பாடியினை ஹூப்ளி முதல் பெல்லாரி மற்றும் ஏலூரு வரை இந்தியா முழுவதும் தெற்கே ஒரு தனி துணையினமாக டெசுடேசியசு (= டெசுடேசியா) எனப் பிரித்தார்.[4] சிலர் இதனை ஒற்றை மாதிரியாகக் கருதுகின்றனர் (மிகவும் சிவந்த வானம்பாடி மைசூர் மற்றும் சேலத்திலிருந்து).[5][6][7] இரண்டு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[8]
விளக்கம்![]() பிற அம்மோமனேசு பேரின வானம்பாடிகளைப் போலவே, இந்த சிற்றினமும் இறகுகளால் மூடப்பட்ட நாசியுடன் நன்கு வளைந்த அலகினைக் கொண்டுள்ளது. பின்னங்கால் கால்விரல் நகம் வரை நீளமாகவும், சற்று வளைந்ததாகவும் இருக்கும். கீழ் தாடையின் அடிப்பகுதி சதைப்பற்றுள்ளதாகவும், மீதமுள்ளவை கொம்புச் சாம்பல் நிறமாகவும் காணப்படும். கால்கள் சதை நிறத்தில் இருக்கும். தொண்டையில் இலேசான அடர் பழுப்பு நிறத்தில் கோடுகள் இருக்கும். இளம் பறவைகளுக்கு அடியில் கோடுகள் குறைவாக இருக்கும்.[9][10][11] பரவல்![]() ![]() இந்த சிற்றினம் முக்கியமாகக் குறைந்த உயரமுள்ள வறண்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க மரங்கள் இல்லாத திறந்த வாழ்விடங்களில் காணப்படுகின்றன. இது இந்தியாவிற்குள் கங்கைக்கு தெற்கே, மேற்கே கச்சு மற்றும் ராஜஸ்தானின் ஆரவல்லி மலைத்தொடர் வரை பரவியுள்ளது. இவை பாக்கித்தானின் வடக்கு பஞ்சாப் மற்றும் தெற்கு நேபாளத்தில் உள்ள சில பகுதிகளுக்கு கோடைக்காலத்தில் வலசைப் போகின்றன. இந்த சிற்றினம் இலங்கையில் காணப்படுவதில்லை. தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் தீவில் இவை காணப்பட்டதற்கான அறிக்கைகள் ஏதும் இல்லை. அதே நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் குறிப்பாகக் கேரளாவில் இந்தச் சிற்றினம் பெரும்பாலும் இல்லை.[7][9] சூழலியல் மற்றும் நடத்தைபொதுவாக இவை நிலத்தில் காணப்படும். சில நேரங்களில் கம்பிகளில் அமர்ந்து காணப்படும். இவை பூச்சிகளைப் பிடிக்க விரைவாகப் பிடிக்கக் கோடுகளை உருவாக்கி தரையில் நடக்கின்றன. மேலும் தொந்தரவாக இருக்கும் போது குனிந்து, மிக அருகில் நெருங்கும் போது மட்டும் அசையாமல் இருக்கும். இனப்பெருக்க காலம் பிப்ரவரி முதல் மே வரை ஆகும். கூடு தரையில் தாழ்வான நிலையில் கட்டப்பட்டு இரண்டு முதல் நான்கு முட்டைகள் வரை இடுகின்றன. முட்டைகள் பளபளப்புடன் பரந்த நீள்வட்ட வடிவில் காணப்படும்.[12] இதன் நிறம் நுரை அல்லது வெளிர் மஞ்சள்-வெள்ளை நிறத்துடன் புள்ளிகளுடன் காணப்படும்.[9][13] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia