கலவந்தின் துர்க்
கலவந்தின் துர்க் (Kalavantin Durg) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள பிரபால்காட் கோட்டைக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள 2,250 அடி (686 m) அடி (686 மீ) உயரமுள்ள மலை உச்சியில் அமைந்துள்ள கோட்டை ஆகும். இது கெல்வே தீன், கலாவந்தினிச்சா சுல்கா அல்லது கலாவந்தின் உச்சி என்றும் அழைக்கப்படுகிறது. மாற்று லிப்யந்தரணங்களில் கலாவந்தின், கலாவதி மற்றும் கலாவந்தி ஆகியவை அடங்கும். இது ஒரு பிரபலமான மலையேற்ற இடமாகும். வரலாறுகலவந்தின் துர்க்கின் உச்சிக்குச் செல்லத் தொடர்ச்சியான படிகள் உள்ளன. ஆனால் இதன் கட்டமைப்பின் வரலாறு பற்றி அதிகம் அறியப்படவில்லை. உள்ளூர் வழிகாட்டிகளின் கூற்றுப்படி, இது 15ஆம் நூற்றாண்டில் அண்டை நாடான பிரபால்காட்டின் கலவந்தின் என்ற அரசிக்காகக் கட்டப்பட்டது. மராத்தி மொழியில் துர்க் என்ற சொல்லுக்குக் கோட்டை என்று பொருள். இது "கலவந்தின் துர்க்" என்று அழைக்கப்பட்டாலும், இங்குக் கோட்டை இல்லை. கலவந்தின் என்பது சுற்றியுள்ள பகுதிகளைக் கண்காணிக்க ஆட்சியாளரால் பயன்படுத்தப்பட்ட ஓர் உச்சி ஆகும்.
மலையேற்றம்கலவந்தின் துர்க்கின் உச்சிக்குச் செல்வது மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகவும் சவாலான ஒன்றாகக் கருதப்படுகிறது. கர்ஜத் வட்டத்தில் உள்ள தாகூர்வாடி கிராமத்திலிருந்து 3 கி.மீ. (2 மைல்) நடைப்பயணம் மூலம் இந்த மலை உச்சியினை அடையலாம். பிரபால்மாச்சி கிராமத்திற்குப் பிறகு (தாகூர்வாடியிலிருந்து 2 கிமீ 1⁄4 மைல் தொலைவில்) நடைபாதை இரண்டு பாதைகளாகப் பிரிகிறது. குறுகிய பாதை கலவந்தின் துர்க் நோக்கியும், நீளமான பாதை பிரபால்காட் கோட்டையை நோக்கியும் செல்கிறது.[1] கலவந்தின் உச்சிக்குச் செல்லும் பாதை தோராயமாக 60 பாகை சாய்வினைக் கொண்டது. மேலும் 2 அடி உயரமுள்ள பாறையில் வெட்டப்பட்ட படிகளை உள்ளடக்கியது. மலையேறுபவர்களின் தற்செயலான மரணங்கள்திசம்பர் 2016இல், ஐதராபாத்தைச் சேர்ந்த 27 வயதான மலையேற்ற வீரர் ரச்சிதா குப்தா கனோடியா, கலவந்தின் துர்க் மற்றும் பிரபால்காட் ஆகிய இடங்களுக்கு மலையேற்றத்தின் போது இறந்தார். இவர் இறந்து சுமார் 10 நாட்களுக்குப் பிறகு இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் முன்னதாக செப்டம்பரில் கலவந்தின் துர்க் மலை உச்சிக்கு ஏறினார். மேலும் இவர் பிரபால்காட் சிகரத்திலிருந்து விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.[2] பிப்ரவரி 2018-இல், புனேவைச் சேர்ந்த 27 வயதான மலையேற்ற வீரர் சேத்தன் தண்டே, கலவந்தின் துர்க்கின் உச்சியிலிருந்து 15 அடி தொலைவில் இருந்தபோது விழுந்து இறந்தார்.[3] மேலும் இவருடன் மலையேறிய பலர் இவர் கீழே விழுவதைக் கண்டனர். கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகு இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.[4] தண்டே இறந்த பிறகு, உள்ளூர் நிர்வாகம் மலையேறுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் புதிய விதிகளை அறிவித்தது. புதிய விதிகளின்படி, ஒவ்வொரு மலையேறுபவரும் ₹ 20 நுழைவுக் கட்டணத்தைச் செலுத்தி, தங்கள் தனிப்பட்ட விவரங்களை வழங்கி நிர்வாகத்தில் பதிவு செய்ய வேண்டும். மாலை 5 மணி முதல் காலை 6 மணி வரை இருண்ட நேரத்தில் இப்பகுதிக்குள் நுழைய அனுமதியில்லை. மற்ற நேரங்களில், உள்ளூர் வழிகாட்டியுடன் வரும்போது மட்டுமே நுழைவு அனுமதிக்கப்பட்டது. இதற்கு ₹50 செலவாகும். நிர்வாகம் 50 உள்ளூர் கிராமவாசிகளுக்கு வழிகாட்டிகளாகப் பயிற்சி அளித்துள்ளது. மலையேறுபவர்கள் நெகிழிப் பைகள் அல்லது நெகிழிப் பாட்டில்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia