கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைகலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை (Kalaignar Centenary Super Specialty Hospital) என்பது சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஒரு அரசு மருத்துவமனை ஆகும். இந்திய ரூபாய் 230 முதல் 380 கோடி வரையிலான செலவில் நிறுவப்பட்ட இம்மருத்துவமனையை தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் 2023, சூன் 15 அன்று திறந்து வைத்தார்.[1] இது 1,000 படுக்கைகள் கொண்டுள்ளது. இங்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு மேம்பட்ட மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.[2][3] வரலாறுகலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையானது, சென்னையில் 500 படுக்கை வசதிகளுடன் அமைக்க திட்டமிட்ட பல நவீன வசதிகள் கொண்ட ஒரு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாகும்.[4] இது கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனத்தின் வளாகத்தில் கட்ட திட்டமிடப்பட்டது. தமிழக அரசால் 2021, சூன் 3 அன்று அறிவிக்கப்பட்ட இந்த மருத்துவமனை, ரூ 250 கோடி செலவில் நிறுவப்பட இருந்தது.[4] இந்தத் திட்டம் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. கருணாநிதியின் 98-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் திட்டமிட்ட நிகழ்வுகளின் ஒரு பகுதியாகும்.[4][5] இது 51,249 சதுர மீட்டர் பரப்பளவில் ஏழு தளங்களில் அமைந்துள்ளது. மொத்தம் 1,000 படுக்கைகள் கொண்டதாக உள்ளது. இந்தத் திட்டம் ₹230 கோடி செலவில் நிறைவடைந்தது.[5] மருத்துவமனையின் திறப்பு விழாவுக்கு முதலில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்பட்டார். ஆனால் சுரிநாம், செர்பியா போன்ற நாடுகளுக்கு செல்ல முன்பே திட்டமிட்டிருந்த நிகழ்சிகளினால் அவரால் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.[6] இதன் பிறகு, 2023, சூன் 15 அன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.[6] மு. க. ஸ்டாலினும், நான்கு செவிலியர்களும் இணைந்து முறையாகத் திறந்து வைத்தனர்.[7] இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, திமுக தலைவர் மு. கருணாநிதி பேனாவைக் கொண்டு எழுதுவது போன்ற ஒரு முழுவுருவச் சிலையும் திறக்கப்பட்டது.[7] ஆறு மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்ட 15 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.[7] இந்த மருத்துவமனை வளாகத்தில் 40 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சை பிரிவும் 200 படுக்கைகள் கொண்ட தேசிய முதியோர் நல மருத்துவ மையமும் உள்ளன. இந்த மையம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் கீழ் செயல்படும். இதனை 2023, பெப்ரவரி 25 அன்று பிரதமர் நரேந்திர மோதி மெய்நிகர் முறையில் திறந்து வைத்தார்.[1] இந்த மருத்துவனை அதன் முதல் ஆண்டில், இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தது. 63,505 உள்நோயாளிகளை அனுமதித்தது. 2,179 அறுவை சிகிச்சைகளை நடத்தியது.[8] இந்த மருத்துவமனை இதுவரை பல சிக்கலான அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளது.[8] அவற்றில் சில:
உள்கட்டமைப்புஇந்த மருத்துமனை பல உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. அதில் சில முக்கிய அம்சங்கள்:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia