கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (Kaloji Narayana Rao University of Health Sciences) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் வாரங்கல் நகரில் உள்ள பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் கவிஞரும் தெலங்காணாவின் அரசியல் ஆர்வலருமான கலோஜி நாராயண ராவின் பெயரால் அழைக்கப்படுகிறது. வரலாறுதெலங்காணா மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பு, அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் டாக்டர் என். டி. ஆர். சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. எனவே, ஆந்திரப்பிரதேசத்திலிருந்து தெலங்காணா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, தெலங்காணா அரசு "கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்" என்ற புதிய பல்கலைக்கழகத்தை நிறுவியது. இதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 7 ஆகத்து 2016 அன்று முறைப்படி அடிக்கல் நாட்டினார். இப்பல்கலைக்கழகம் தெலங்காணா மருத்துவக் கல்லூரிகளின் மறு இணைப்புடன் சூன் 2016 முதல் செயல்படத் தொடங்கியது.[1][2] சேர்க்கை மற்றும் படிப்புகள்மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளநிலைப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது சேர்வதற்கான விண்ணப்பதாரரின் நீட் தேர்வு (தேசிய தகுதி நுழைவுத் தேர்வு) தரவரிசை மற்றும் பிற துணை மருத்துவ மற்றும் மருந்தியல் படிப்புகளுக்கான இஏஎம்சிஈடி தரவரிசை அடிப்படையிலும் நடைபெறுகிறது. இணைவுபெற்ற கல்லூரிகள்அரசு கல்லூரிகள்அரசு கல்லூரிகளில் 1250 மருத்துவ இடங்கள் உள்ளன. குறிப்பிடத்தக்கக் கல்லூரிகள்:
தனியார் கல்லூரிகள்தனியார் கல்லூரிகளில் 2250 இடங்கள் உள்ளன.
மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia