கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில்
கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கல்லிடைக்குறிச்சி என்னும் ஊரில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] வரலாறுபிற்கால பாண்டிய மன்னர் சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் 16-ஆம் நூற்றாண்டில் கல்லிடைக்குறிச்சியில் அறம் வளர்த்த நாயகி உடனுறை குலசேகரமுடையார் கோயிலைக் கட்டினார்.[2] கோயில் அமைப்புஇக்கோயிலில் குலசேகரமுடையார், அறம்வளர்த்தநாயகி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3] பூசைகள்இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காரணாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் ஆடிப்பூரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. நடராஜர் சிலை1982-இல் களவாடப்பட்ட இக்கோயிலின் பஞ்சலோக நடராஜர் சிலை, ஆஸ்திரேலியா நாட்டின் தெற்கு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்தில் இருந்ததை, காவல்துறை சிலை தடுப்பு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கண்டுபிடித்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.[4].[5] மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia