காட்டுப்புத்தூர் வெங்கட்ரமண பெருமாள் கோயில்

அருள்மிகு வெங்கட்ரமண பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
அமைவிடம்:தெற்கு அக்ரஹாரம், காட்டுப்புத்தூர், தொட்டியம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:முசிறி
மக்களவைத் தொகுதி:பெரம்பலூர்
கோயில் தகவல்
மூலவர்:பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள்
தாயார்:பத்மாவதி தாயார்
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி, ஆடிப்பூரம்
வரலாறு
கட்டிய நாள்:பதினாறாம் நூற்றாண்டு நூற்றாண்டு[சான்று தேவை]
அமைத்தவர்:விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்கள்

காட்டுப்புத்தூர் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில்விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. [சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் பிரசன்னவெங்கட்ரமணபெருமாள், பத்மாவதி தாயார் சன்னதிகளும், பத்மாவதி, சக்கரத்தாழ்வார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் ஆடிப்பூரம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya