காட்டுயிர்![]() காட்டுயிர் (wildlife) என்பது இயற்கையான வாழ்விடங்களில் வாழக்கூடிய மனிதனால் தோற்றுவிக்கப்படாத அல்லது மனித நடவடிக்கைகளைச் சார்ந்து வாழாத அனைத்து தாவரங்கள், விலங்குகளைக் குறிப்பதாகும். மனிதனின் நன்மைக்காகக் காட்டுத் தாவரம் மற்றும் விலங்கினங்களை வீட்டுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்துதல் உலகம் முழுவதும் பலமுறை நடந்துள்ளது. இது சுற்றுப்புறச்சூழலுக்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காட்டுயிர்களை அனைத்து சூழ்நிலை மண்டலங்களிலும் காணலாம். பாலைவனங்கள், மழைக்காடுகள், சமவெளிகள் போன்ற இடங்களில் மட்டுமன்றி மிகவும் வளர்ச்சியுற்ற நகர்ப்புறங்களில் கூடத் தனித்துவமான காட்டுயிர் வடிவங்கள் காணப்படுகின்றன. பொதுப் பயன்பாட்டில் இந்த வார்த்தை மனிதக் காரணிகளால் பாதிக்கப்படாத விலங்குகளைக் குறிப்பிட்ட போதும்,[1] பெரும்பாலான அறிவியலாளர்கள் உலகம் முழுவதும் காட்டுயிர்கள் மனித நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்கின்றனர். வரலாற்று ரீதியாக, சட்டம், சமூகம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த உணர்வுகளில் பல வழிகளில் நாகரிகத்தை காட்டுயிர்களில் இருந்து மனிதர்கள் பிரித்திருக்கின்றனர். இவை பதிவு செய்யப்பட்ட வரலாறு முழுவதிலும் விவாதத்திற்கான காரணமாகின. சமயங்கள் பொதுவாக சில விலங்குகளைப் புனிதத்தன்மை உடையவையாக தெரிவித்துள்ளன. தற்காலத்தில் இயற்கைச் சூழலில் ஏற்பட்டுள்ள அக்கறை, மனித நன்மைக்காக அல்லது பொழுதுபோக்குக்காக காட்டுயிர்களைச் சுரண்டுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆர்வலர்களால் மேற்கொள்ளுவதற்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளது. இலக்கியமும் காட்டுயிர்களில் இருந்து பண்டைய மனிதனைப் பிரிப்பதற்கு பயனுள்ளதாக உள்ளது. உணவு, செல்லப்பிராணி, பாரம்பரிய மருந்துகள்கற்கால மக்களும், வேட்டையாடி உணவு சேகரிப்பதை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த மக்களும், உணவுக்காக காடுகளில் வாழும் தாவரம், விலங்குகளைச் சார்ந்திருந்தனர் என மானுடவியல் அறிஞர்கள் நம்புகின்றனர். உண்மையில், சில இனங்கள் முந்தைய மனிதர்கள் வேட்டையாடியதாலேயே அழிந்திருக்கலாம். இன்றும் உலகின் சில பகுதிகளில் வேட்டையாடுதல், மீன் பிடித்தல் அல்லது காட்டுயிர்களைச் சேகரித்தல் ஆகியவை குறிப்பிடத்தக்க உணவு ஆதாரமாக இருக்கின்றன. மற்றப் பகுதிகளில் வேட்டையாடுதல் மற்றும் வணிக அடிப்படையில் அமையாத மீன்பிடித்தல் போன்றவை விளையாட்டாக அல்லது பொழுதுபோக்காக பார்க்கப்படுகின்றன. இதன் ஒருபக்க நன்மையாக பெரும்பாலும் உண்ணத்தக்க மாமிசமும் கிடைக்கிறது. வேட்டை மூலம் கிடைக்காத, பொழுதுபோக்கு வேட்டையாடுதல் மூலம் கிடைக்கும் காட்டுயிர் இறைச்சி புதர் இறைச்சி என அறியப்படுகின்றன. கிழக்காசியாவில் பாரம்பரிய உணவு ஆதாரமாக வன உலக உயிரிகளின் தேவை அதிகரித்துவருகிறது. பாலுணர்ச்சி ஊக்கிப் பண்புடையவையாக நம்பப்படுவதால் சுறா மீன்கள், உயர்விலங்குகள், எறும்புண்ணிகள் மற்றும் இதர விலங்குகள் அழிந்து வருகின்றன. காட்டுயிர் அழிப்புகள்உலக வனவிலங்கு எண்ணிக்கை 1970 முதல் மனித செயல்பாட்டின் விளைவாக, குறிப்பாக அதிகப்படியான நுகர்வு, மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் தீவிர விவசாயம் ஆகியவற்றின் விளைவாக 68% குறைந்துள்ளது. 2020 இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் புவிக்கோளறிக்கையின் படியும், இலண்டனின் உயிரியல் சங்கத்தின் உயிரியல் கிரக குறியீட்டு அளவீட்டின் படி, இது மனிதர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆறாவது ஹோலோசீன் பேரழிவு என்பதற்கான கூடுதல் சான்றாகும்.[2][3] Different countries have various legal definitions for “wildlife”[4] பல்வேறு நாடுகளில் "வனவிலங்குகள்" பற்றிய பல்வேறு சட்ட வரையறைகள் உள்ளன. ஆனால் அழிந்து வரும் காட்டுயிர் வர்த்தக கண்காணிப்பு மற்றும் வலையமைப்பு (CITES) கூற்றுப்படி, ஆண்டுதோறும் சர்வதேச வனவிலங்கு வர்த்தகம் பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது நூற்றுக்கணக்கான மில்லியன் விலங்கு மற்றும் தாவர இனங்களை வெகுவாகப் பாதிக்கிறது. காட்டுயிர் வர்த்தக கண்காணிப்பு மற்றும் வலையமைப்பு அறிக்கையின்படி, 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 900 தோலுரிக்கப்பட்ட மற்றும் "சமைப்பதற்குத் தயாராக இருந்த ஆந்தைகள் மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட காட்டுயிர் இனங்கள் மலேசியாவில் உள்ள காட்டுயிர் மற்றும் தேசிய பூங்காக்கள் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விலங்குகள் சீனாவில் உள்ள வன மாமிச உணவகங்களில் விற்பதற்காக கொண்டு செல்லப்பட இருந்ததாக நம்பப்பட்டது. அவற்றில் பெரும்பாலானவை வர்த்தகத்திற்கு தடைசெய்தல் அல்லது கட்டுப்படுத்துதல் அமைப்பினால் (CITES, வனப் பிரதேச விலங்குகள் மற்றும் தாவரவளங்களின் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்) பட்டியலிடப்பட்டவை ஆகும். "மலேசியா பிரமிக்கத்தக்க காட்டுயிரின் பரந்தகன்ற வரிசை இனங்களைின் வாழிடமாக இருக்கின்றன. எனினும், சட்ட விரோதமான வேட்டை மற்றும் வர்த்தக மனப்பான்மை மலேசியாவின் இயற்கை பன்முகத்தன்மைக்கு மிரட்டல் விடுப்பதாக இருக்கின்றன" என்று காட்டுயிர் வர்த்தக கண்காணிப்பு மற்றும் வலையமைப்புக்கான அறிக்கையின் இணை-எழுத்தாளர் கிரிஸ் எஸ். செப்பர்ட் கூறினார்.[5] 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உயிரியல் வல்லுநர் மற்றும் எழுத்தாளர் முனைவர் சேல்லி நெய்டலால் (Sally Kneidel) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், அமேசான் ஆற்றின் நெடுகிலும் முறையற்ற சந்தைகளில் பல்வேறு காட்டுயிர் இனங்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆவணப்படுத்தியிருந்தார். காட்டில் பிடிக்கப்பட்ட மயிரடர்ந்த வாலுடைய சிறு குரங்கு மிகவும் குறைந்த விலையாக $1.60க்கு (5 பெருவிய நாணயங்கள்) விற்கப்பட்டது கண்டறியப்பட்டது.[6] சிற்றினப் பாலூட்டி, கொறிக்கும் சிறிய விலங்குகள், ஆமைகள் அதன் முட்டைகள், மலைப் பாம்புகள், எறுப்புண்ணிகள் மற்றும் பல அமேசான் பகுதியிலுள்ள இனங்கள் முதன்மையாக உணவுக்காக விற்கப்படுகின்றன. குரங்குகள் மற்றும் கிளிகள் போன்ற மற்ற இனங்கள் இந்த முறையற்ற சந்தைகளில் செல்லப்பிராணிகள் வர்த்தகத்துக்காக ஒதுக்கப்படுகின்றன. இவை பொதுவாக அமெரிக்காவிற்குள் கடத்திவரப்படுகின்றன. இன்னும் மற்ற அமேசான் காட்டுயிர் இனங்கள் உள்ளூர் சந்தைகளில் விற்கப்படும் பாரம்பரிய மருந்துகளில் பிரபலமான பகுதிப்பொருட்களாக இருக்கின்றன. விலங்குகளின் உறுப்புகள் மருத்துவ மதிப்பு பெருமளவு மூடநம்பிக்கை சார்ந்ததாக இருப்பது இதற்கான காரணமாகும். மதம்பல காட்டுயிர் இனங்கள் உலகம் முழுவதும் பல மாறுபட்ட பண்பாடுகளில் புனிதமான முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கின்றன. மேலும், காட்டுயிர்கள் அவை வாழும் பகுதிகளில் கடைபிடிக்கப்படும் மதம் சார்ந்த சடங்குகளில் புனிதமான பொருட்களாக பயன்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, கழுகுகள், பருந்துகள் ஆகியவற்றின் சிறகுகள் மதம் சார்ந்த பொருளாக அமெரிக்க முதற்குடிமக்கள் மத்தியில் சிறந்த கலாச்சார மற்றும் தெய்வீக மதிப்புடையவையாக இருக்கின்றன.[7] புராணம்வெவ்வேறு விலங்குகள் வெவ்வேறு இடங்களில் புனிதத்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. விலங்குகள் பொதுவாக கடவுள்களினால் ஆசீர்வதிக்கப்பட்டவையாகவோ அல்லது புனிதமடைந்தவையாகவோ கருதப்படுகின்றன. எடுத்துக்காட்டாக மயில்கள் மற்றும் பசுக்கள் கிரேக்க புராணக்கதைகளில் புனிதத்தன்மை கொண்டவையாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஏனெனில் மயில்கள் மற்றும் பசுக்கள் "எரா" என்ற பெண் கடவுளுக்கு புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. நாய்கள் மற்றும் ஆந்தைகள் ஆகியவையும் கூட கிரேக்கப் புராணக்கதைகளில் புனிதத்தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் "அரேஸின்" விருப்பமான விலங்காக நாய் இருக்கிறது மற்றும் "அதெனாவின்" விருப்பமான விலங்காக ஆந்தைக் கருதப்படுகிறது. மற்ற விலங்குகள் அவற்றின் பயன் காரணமாக அல்லது கடவுள்களுக்கு பலியிடப்படுவதன் காரணமாக புனிதத்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. தற்போதுகூட பசுவும் புனிதத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடவுள் ஏதேனும் ஒரு காரணத்தினால் தன்னை விலங்காக மாற்றிக் கொள்ள தேர்ந்தெடுப்பதால் புனிதத்தன்மை கொண்டவையாகக் கருதப்படலாம். எடுத்துக்காட்டாக, "சியுசு" தனது மனைவி எராவின் கண்டிப்பான பார்வையிலிருந்து தப்ப தன்னை சில விலங்குகளாக மாற்றிக்கொள்வதாக புராணங்களில் கூறப்படுகிறது.[8] ஊடகத்துறை![]() காட்டுயிர் நீண்ட காலமாக கல்வி சார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான ஒரு பொதுவான பொருளாக இருக்கிறது. 1965 ஆம் ஆண்டில் தேசிய புவியியல் கழக சிறப்பு நிகழ்ச்சிகள் கொலம்பிய ஒலிபரப்பு முறையில் ஒளிபரப்ப ஆரம்பிக்கப்பட்டன. பின்னர் அமெரிக்க ஒலிபரப்பு நிறுவனம் மற்றும் பொது ஒளிபரப்புச் சேவை ஆகியவற்றிலும் ஒளிபரப்பப்பட்டன. 1963 ஆம் ஆண்டில் தேசிய ஒலிபரப்பு நிறுவனம் காட்டுயிர் இராட்சியம் என்ற பெயரில் உயிரியல் வல்லுநர் மார்லின் பெர்கின்ஸால் தொகுத்து வழங்கப்பட்ட ஒரு பிரபலமான நிகழ்ச்சியை வழங்கியது.[9] ஐக்கிய இராச்சியத்தில் பிபிசி இயற்கை வரலாற்றுப் பிரிவும் இதற்கு முன்னோடியாக இருந்தது. அதில் முதல் காட்டுயிர் தொடர் லுக் (LOOK) சேர் பீட்டர் ஸ்காட்டால் என்பவரால் வழங்கப்பட்டது. இது படம் பிடிக்கப்பட்ட இடைச்சேர்ப்புக்களுடன் கூடிய அரங்கம் சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தது. இதனைத் தொடர்ந்து டேவிட் அட்டென்பரோ மற்றும் அவரும் அவரது ஒளிப்பதிவாளர் சால்ஸ் லாகசும் மற்றுமொரு (Zoo Quest) தொடருக்காக பல விந்தையான காட்டுயிர் வாழிடங்களுக்கு செல்வதற்கு வழிவகுத்தது.[10] 1984 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் டிஸ்கவரி சேனல் மற்றும் அதன் உப அலைவரிசை விலங்குகள் உலகம் போன்றவை கம்பி வட தொலைக்காட்சியில் காட்டுயிரைப் பற்றி நிகழ்ச்சிகள் வழங்கி ஆதிக்கம் செலுத்தி வந்தன. அதே சமயம் நியூயார்க்கில் பொது ஒளிபரப்புச் சேவையின் "இயற்கை", விநெட்-13 மூலமாக உருவாக்கப்பட்டது. அத்தோடு நோவா (NOVA) ஆகியவை குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. காட்டுயிர் தொலைக்காட்சி தற்போது ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளின் ஆவணத்திரைப்படம் உருவாக்குபவர்களின் நிபுணர்களுடன் பல மில்லியன் டாலர் வருவாய் ஈட்டித்தரும் துறையாக இருக்கிறது. காட்டுயிர் பற்றிய பல இதழ்கள், சிறார் இதழ்கள் உட்பட தற்போது வெளிவருகின்றன. சுற்றுலாஊடகம் மற்றும் பாதுகாத்தல் கல்வி ஆகியவற்றால் காட்டுயிர் சூழல் சுற்றுலா பிரபலமான துறையாக முன்னேறி வருகிறது. இது குறிப்பாக ஆப்பிரிக்காவில் கணிசமான வருவாயையும் உருவாக்குகிறது. பல நாட்டு அரசாங்கங்களும் இவ்வகை சூழல் சுற்றுலாக்களை ஊக்குவிக்கின்றன.[11] அழித்தல்![]() இந்த உப பிரிவு காட்டுயிர் அழிப்புத் தொடர்பாக மனிதவளர்ச்சி வடிவங்களின் மீது கவனம் செலுத்துகிறது. காட்டுயிர்களைச் சுரண்டுவது என்பது 1,30,000 – 70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் வெளியேறிய காலத்தில் இருந்தே மனிதனின் குணவியல்பாக இருந்துவருகிறது. உலகம் முழுவதும் தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்களின் அழிவு விகிதம் கடந்த சில நூறு ஆண்டுகளாக மிகவும் அதிகமாக இருக்கிறது. இதனால் நாம் இந்த உலகில் ஹோலோசீன் பேரழிவு எனப்படும் ஆறாவது பெரும் அழிவு நிகழ்வில் இருப்பதாகப் பரவலாகக் கருதப்படுகிறது. காட்டுயிர் அழிப்பு எப்பொழுதும் குறிப்பிட்ட இனங்களின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதில்லை. எனினும் பூமி முழுவதும் எண்ணற்ற இனங்களின் குறிப்பிடத்தக்க இழப்பு, காட்டுயிரை அழித்தலில் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கிறது. மீட்கமுடியா வன வள எண்ணிக்கைகளுக்கு சேதம் விளைவித்தலின் நிலையாக இந்த அழிவு இருக்கிறது. அதிகப்படியாகக் கொல்லுதல், இருப்பிடத்தை அழித்தல் மற்றும் துண்டாக்குதல், அறிமுகப்படுத்தப்பட்ட இனங்களின் தாக்கம் மற்றும் தொடர் அழிவு உள்ளிட்ட நான்கு முக்கியமான பொதுவான காரணங்கள் காட்டுயிரை அழித்தலுக்கு வழிவகுக்கின்றன.[12] அதிகப்படியாகக் கொல்லுதல்சுரண்டப்பட்ட எண்ணிக்கைகளின் மறு உருவாக்கத்திறனை விட அதிகளவில் வேட்டையாடும் விகிதங்கள் எப்போதெல்லாம் இருக்கிறதோ அப்போது அதிகப்படியாகக் கொல்லுதல் ஏற்படுகிறது. இதன் விளைவுகள் பொதுவாக மீனின் பல பெரிய இனங்கள் போன்ற மெதுவாக வளரும் எண்ணிக்கைகளில் மிகவும் அதிகளவில் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. வேட்டையாடுதல், மீன் பிடித்தல் மற்றும் பல, எண்ணிக்கையில் காட்டுயிர்களிடத்தில் போட்டியைக் குறைக்கிறது. எனினும் எண்ணிக்கைகளின் புதிய உறுப்பினர்கள் இனப்பெருக்க வயதை அடைந்து மற்றும் மிகவும் இளமையானதை உருவாக்கும் விகிதத்தைக் காட்டிலும் வேட்டையாடுதல் விகிதங்கள் அதிகப்படியாக இருந்தால் அவற்றின் எண்ணிக்கைகள் அளவில் குறையத் தொடங்கும். இருப்பிடத்தை அழித்தல் மற்றும் துண்டாக்குதல்![]() குறிப்பிட்ட இனத்தின் இருப்பிடம் அதன் விருப்பமான பகுதியாகவோ அல்லது பிரதேசமாகவோ கருதப்படுகிறது. மனித இருப்பிடத்துடன் தொடர்புடைய பல செயல்பாடுகள் இந்தப் பகுதிகளின் இழப்பிற்குக் காரணமாகின்றன. மேலும் அந்த இனங்கள் அந்த நிலத்தில் இருப்பதற்கான திறனையும் அவை குறைத்துவிடுகின்றன. பல நிகழ்வுகளில் இடங்களின் பயன்பாடுகளில் இந்த மாற்றங்கள் வன நிலத்தோற்றத்தின் அசாதரணமான அழிப்புக்கு காரணமாகின்றன. பண்ணை விலங்குகள் மூலமாக புதர் நிலங்களில் மேய்ச்சலுக்கு விடுதல், இயற்கையான தீப்பிடித்தல் நடைமுறை மாற்றங்கள், கட்டட வேலைக்கான மரத்துண்டுகளுக்காக காட்டை அழித்தல் மற்றும் நகர் விரிவாக்கத்துக்காக நன்செய்நிலங்களை அழித்தல் உள்ளிட்டவை இருப்பிட அழித்தலின் எடுத்துக்காட்டுகளாகும். அறிமுகப்படுத்தப்பட்ட இனங்களின் தாக்கம்எலி, பூனைகள், முயல்கள், டான்டலியன்கள் மற்றும் நச்சுக் கொடி ஆகிய அனைத்தும் உலகம் முழுவதிலும் பல பகுதிகளில் துளையிடல் பயமுறுத்தலாக மாறியிருக்கும் இனங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். அடிக்கடி காணப்படும் இனங்கள் தங்கள் எல்லையில் இருந்து தொலைவில் ஆனால் அதே தட்ப வெப்பநிலையில் இருக்கும்போது கட்டுப்பாட்டை மீறிய தாக்குதலை ஏற்படுத்துவது மிகவும் அரிதானதாக இருக்கிறது. இதற்கான காரணங்கள் எப்போதும் தெளிவாக இல்லை. மேலும் சார்லஸ் டார்வின் இது பற்றி எதிர்பார்க்க இயலாத வகையில் அயற்பண்புடைய இனங்கள் அவை உருவாகாத இடங்களிலும் எக்கச்சக்கமாக வளர முடியும் என நினைக்கிறார். உண்மையில் பெரும்பாலான எண்ணிக்கையிலான இனங்கள் புதிய வாழ்விடங்களில் இருக்கும் போது அவற்றால் இனப்பெருக்கம் செய்ய இயலுவதில்லை. எனினும் எப்போதாவது, பிடித்து வைத்திருக்கப்படும் சில இனங்கள் சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளத் தேவைப்படும் காலத்திற்குப் பிறகு கணிசமான அளவில் எண்ணிக்கையில் அதிகரிக்கின்றன. ஆனால் அவை அதன் சொந்த சூழலில் ஒரு பகுதியாக இருந்த பல மூலகங்களில் அழிவு விளைவுகளைக் கொண்டவையாக இருக்கின்றன. அழிந்தவைகளின் சங்கிலிகள்இந்த இறுதிக் குழு இரண்டாம் நிலை விளைவுகளில் ஒன்றாக இருக்கிறது. காட்டில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் அதனைச் சுற்றி வாழும் மற்ற உயிர்களுடன் உட்சுற்றுப் பிணைப்பைக் கொண்டுள்ளன. நீர்யானை போன்ற பெரிய தாவர உணவு உண்ணி விலங்குகளில், நீர் யானையில் வளரும் பல ஒட்டுண்ணி பூச்சிகளை பூச்சியுண்ணுகின்ற பறவைகள் உணவாக உட்கொள்கின்றன. இந்த நீர்யானையானது இறப்பதற்கும் கூட இந்தப் பறவைகளின் கூட்டம் காரணமாகிவிடுகிறது. மேலும் இது பறவைகளைச் சார்ந்திருக்கும் மற்ற இனங்கள் பாதிக்கப்படுவதன் மூலமாக தொடர்ந்து அழிவுக்கு வழிவகுக்கிறது. டோமினோ விளைவு எனவும் குறிப்பிடப்படும் இந்தத் தொடர் விளைவுகளின் தொடர்ச்சி, சூழ்நிலையியல் சமூகத்தில் ஏற்படக்கூடிய மிகவும் அழிவு ஏற்படுத்தக்கூடிய செயல்பாடாக இருக்கிறது. மற்றொரு எடுத்துக்காட்டாக இந்தியாவில் காணப்படும் இரட்டைவால் குருவிகள் மற்றும் உண்ணிக் கொக்குகள், கால்நடைகளின் உடல் மேற்பகுதியிலிருப்பவற்றை உண்கின்றன. அதனால் அவற்றை கிருமி நீக்கம் செய்யப்பட்டவையாக இருக்க விடுகின்றன. ஒரு வேளை நாம் இந்தப் பறவைகளின் இருப்பிடங்களை அழித்தால் அதனால் கால்நடைகளின் எண்ணிக்கையில் இழப்பு ஏற்பட ஏதுவாகலாம். ஏனெனில் அவற்றால் சில நோய்கள் பரவ வாய்ப்பு ஏற்படலாம். மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia