அமெரிக்க முதற்குடிமக்கள்
தற்கால வட அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் தோற்றம் கடந்த 400 ஆண்டுகளில் நிகழ்ந்த இனப்படுகொலைகள் நிகழ்வாகும். அவர்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வட, தென் அமெரிக்காக்களில் பல குழுக்களை அல்லது இனங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவற்றில் சில பெரிய நாகரிங்களாக வளர்ச்சி பெற்றிருந்தன. இந்த மக்களே அமெரிக்க முதற்குடிமக்கள் அல்லது செவ்விந்தியர்கள் என்று அறியப்படுகிறார்கள். இரண்டு கண்டங்களில் பரந்து வாழ்ந்த இந்த மக்கள் பல குழுக்களாக அல்லது நாடுகளாக வாழ்தனர். இவர்களுக்கு இடையேயான சூழலிய, மொழி, பண்பாட்டு, வரலாற்று, வாழ்விய வேறுபாடுகள் மிகப் பல. எனினும் ஐரோப்பிய அரசுகளால் தோற்கடிக்கப்பட்டு, அடக்கப்பட்ட வரலாறு இவர்கள் எல்லோருக்கும் உள்ளது. ஆசிய, ஆபிரிக்க நாடுகள் போல் அல்லாமல் இந்த நாடுகள் அல்லது இனக் குழுக்கள் என்றும் அரசியல் விடுதலை பெறவில்லை. ஐரோப்பியர்கள் ஏற்படுத்திய நாடுகளுக்குள்ளே தமது சுதந்திரத்தை, உரிமைகளை இவர்கள் நிலைநாட்ட முயற்சி செய்கிறார்கள். இதனையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia