காமாக்யா கோவில்
காமாக்கியா கோவில் (Kamakhya Temple, அசாமிய மொழி: কামাখ্যা মন্দিৰ) காமாக்கியா என்ற இந்துக் கடவுளின் கோவில் ஆகும். இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.[2] இந்தியாவில் அசாம் மாநிலத்தில் குவகாத்தி நகரின் மேற்குப் பகுதியில் நீலாச்சல் குன்றில் அமைந்துள்ளது. இங்குள்ள பத்து தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் காமாக்கியா பிரதான கோவிலாகும்.[3] இவற்றில் திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா தேவியரின் கோவில்கள் காமாக்கியா கோவிலினுள் அமைந்துள்ளன. ஏனைய ஏழும் தனித்தனிக் கோவில்களாக அமைக்கப்பட்டுள்ளன.[4] அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் நீலாச்சல் என்ற மலை அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் இந்த மலை மீது காமாக்யாதேவியின் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. இது தாட்சாயிணியின் (சதி தேவி) யோனி விழுந்த சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது. [5] [1] பரணிடப்பட்டது 2020-04-26 at the வந்தவழி இயந்திரம் ![]() கோவிலைப் பற்றிய புராணத் தகவல்கள்காமாக்யா தேவிக்கு திரிபுர பைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனிமண்டல வாஸினி, மஹாகாளி, மஹாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி என்று பல பெயர்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மேலும் இந்தத் தலத்தை காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த கோவிலில் சிலை இல்லை. இங்கே ஒரு யோனி வடிவத்தில் உருவான ஒரு தட்டையான பாறை மட்டுமே வணங்கப்படுகிறது, அதனால்தான் காமக்கியா தேவியும் இரத்தப்போக்கு தேவி என்று போற்றப்படுகிறார். இந்த கோவிலில் சென்று வழி பட்டால் பிரிந்த தம்பதிகள் சேர்வார்கள் , குழந்தை பாக்கியம் கிடைக்கும் , நிண்ட நாள் வயதுக்கு வராதா பிள்ளைகள் பூபு அடைவாரகள்....[6] இங்கு பாண்டவர்கள் தேவியை வழிபட்டதாக மஹாபாரதத்தின் விராட பர்வம் மற்றும் பீஷ்ம பர்வம் கூறுகிறது. மகாபாரதத்தின் விராட பர்வம் (6) மற்றும் பீஷ்ம பர்வம் (23) ஆகியவற்றில் காமாக்யாவை அர்ஜுனனும் யுதிஷ்ட்ரரும் பிரார்த்தித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் தந்திர சூடாமணி போன்ற பல தந்திர நூல்களும் இக்கோவிலை சக்தி பீடங்களில் மிக உயர்ந்த பீடமாகச் சொல்கின்றன. மேலும் காளிகா புராணம் கூறும் மிக முக்கியமான நான்கு ஆதி சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவில் பற்றிய தகவல்கள் வேத வியாசரின் தேவி பாகவத புராணத்திலும் உள்ளது. அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்ரம் தேவிக்கு 18 மகா சக்தி பீடங்கள் உள்ளதாகக் கூறுகிறது. அதிலும் காமாக்யா கோவில் இடம் பெறுகிறது. காமாக்யா கோவிலில் மந்திர தந்திரங்கள்இந்து சமயத்தின் ஆறு பிரிவுகளில், சக்தி வழிபாட்டு முறையில்தான் அதிக அளவில் மந்திர தந்திரங்கள் கையாளப் படுகின்றன. அவ்வகை வழிபாட்டுக் கென்று சிறப்பான ஆலயங்களும் உள்ளன. அவற்றில் தலையாயது காமாக்யா தேவி கோவில். காமாக்யா கோவில் கட்டிட அமைப்புபத்தாம் நூற்றாண்டில் அஸ்ஸாம் மன்னர்களால் சீர்திருத்தப்பட்ட உண்மையான காமாக்யா கோவில் பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டது. தற்போதுள்ள கோயிலை கூச் பீகாரின் அரசர் நர நாராயணா என்பவர் கி.பி.1565 ல் மீண்டும் கட்டினார். 1665ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.[7] இக்கோவிலின் வெளித்தோற்றத்தைப் பார்த்தால் மட்டுமே கோவில் போல தோன்றும். உள்ளே சென்றால் இருண்ட பாதாள குகை போன்று இருக்கும். இங்கு சிறு விளக்கு வெளிச்சத்தில் காமாக்யாவின் யோனி பீடத்தை தரிசிக்கலாம். அங்கிருந்து வரும் நீரூற்றின் நீரை பக்தர்கள் தீர்த்தமாகப் போற்றுகின்றனர். தச மஹா வித்யாக்களின் சன்னதிகள்இக்கோவிலில் காளி, தாரா, லலிதா திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி மற்றும் கமலா ஆகிய தச மஹா வித்யாக்கள் எனப்படும் பத்து தேவியருக்கும் சன்னதிகள் உண்டு. காமாக்யா கோவில் திருவிழாக்கள்
உமாநந்தர் கோவில்இக்கோவில் காமாக்யா பீடத்திற்கான பைரவரின் கோவிலாகும்.[10] பிரம்மபுத்ரா ஆற்றில் அமைந்திருக்கும் பீகாக் ஐலேண்ட் தீவுப்பகுதியில் உமானந்தா கோயில் வீற்றிருக்கிறது. ஆஹோம் வம்ச மன்னரான கடாதர் சின்ஹா’வின் ஆட்சிக்காலத்தில் பர் புகான் கர்கன்யா ஹந்திக் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. ஃபெர்ரி படகுகள் மற்றும் மோட்டா படகுகள் மூலமாக மட்டுமே இந்த கோயிலுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia