காவேரி நீர் பிணக்குகளுக்கான தீர்ப்பாயம்

காவேரி நீர் பிணக்குகளுக்கான தீர்ப்பாயம் (Cauvery Water Disputes Tribunal (சுருக்கமாக:CWDT), மாநிலங்களுக்கு இடையேயான நீர் தகராறு சட்டம், 1956 இன் கீழ் இத்தீர்ப்பாயம் சூன் 1990ஆம் ஆண்டில் இந்திய அரசால் நிறுவப்பட்டது..காவேரி ஆற்றின் கருநாடகம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் நீரை பகிர்ந்து கொள்வது மற்றும் நீர் பங்கீட்டு பிணக்குகளை தீர்ப்பதற்காக 1990ஆம் ஆண்டில் இந்திய அரசால் நிறுவப்பட்டது. காவிரி ஆற்றின் படுகையிலுள்ள நான்கு மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீடுகளை கோடிட்டுக் காட்டும் வகையில், இத்தீர்ப்பாயம் 2007ஆம் ஆண்டில் தனது இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. அதில் காவேரி ஆற்றை தேசிய சொத்தாக அறிவித்து தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2018ஆம் ஆண்டு காவேரிஆற்றை இந்திய தேசிய சொத்தாக அறிவித்த தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

வரலாறு

காவிரி நீர்ப் பங்கீடு குறித்து 1924ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாண நிர்வாகத்திற்கும், மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம், சர்ச்சையின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணமாகக் கருதப்படுகிறது.

நோக்கம்

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையிலான காவேரி நீர் பங்கீடு செய்வதில் உள்ள பிணக்குகளைத் தீர்ப்பதே இத்தீர்ப்பாயம் நோக்கமாகும்.

தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு

.காவேரி நீர் பிணக்குகளுக்கான தீர்ப்பாயத்தின் முதல் கூட்டம் சூலை 1990இல் நடைபெற்றது.பிப்ரவரி 2007இல் வெளியிடப்பட்ட தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி, நான்கு மாநிலங்களுக்கு இடையே காவேரி நீர் பங்கீடுகளை அறிவித்து தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பின்படி, ஒரு வருட வழக்கமான நீர் இருப்பான 740 TMC (1 tmcft is equivalent to: 1,000,000,000 cubic feet (28,000,000 m3) அடிப்படையில் நீர்ப் பங்கீடு செய்தது. அதன்படி, கர்நாடகாவிற்கு 284 டி எம் சி நீரும், தமிழ்நாட்டிற்கு 404 டி எம் சி நீரும், கேரளாவிற்கு 30 டி எம் சி நீரும், புதுச்சேரிக்கு 7 டி எம் சி நீரும் பங்கீடு செய்தது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

தீர்ப்பாயத்தின் இத்தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 2018ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பாயத்தின் முடிவை உறுதிசெய்ததுடன், காவேரி நீர் பங்கீடு சரிவர பங்கீடப்படுகிறதா என்பதை கண்காணிக்க காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தை நிறுவ இந்திய அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.[1]இனி வருங்காலங்களில் காவேரி நீர் குறித்த பிணக்குகள் காவேரி நீர் மேலாண்மை ஆணையமே முடிவுகள் எடுக்கும்.

நடந்து கொண்டிருக்கும் சர்ச்சைகள்

தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் காவேரி நீர் மேலாண்மை ஆணையம் இருந்த போதிலும், மாநிலங்களுக்கு இடையே, குறிப்பாக கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு காவேரி நீர் விடுவிப்பது தொடர்பாக சர்ச்சைகள் மற்றும் போராட்டங்கள் தொடர்ந்து எழுகின்றது.[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya