காவிரி நீர் மேலாண்மை ஆணையம்காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (Cauvery Water Management Authority (சுருக்கமாக:CWMA) என்பது கருநாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய காவிரி ஆறு பாயும் மாநிலங்களுக்கு இடையே காவிரி ஆற்றின் நீர் வளங்களை நிர்வகிக்க இந்திய அரசின் நீர் வள அமைச்சகத்தின் கீழ் சூன் 1, 2018 அன்று நிறுவப்பட்ட ஒரு ஒழுங்குமுறை அமைப்பாகும்.[1] இந்த ஆணையம் காவேரி நீர் பிணக்குகளுக்கான தீர்ப்பாயம், இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நிறுவப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சமமான காவிரி நீர் விநியோகம், செயல்படுத்தலை உறுதி செய்கிறது.[2] வரலாறு1956ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தகராறுகள் சட்டத்தின் பிரிவு 6Aஇன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்திய அரசு சூன் 1, 2018 அன்று காவிரி நீர் தொடர்புடைய மாநில அரசுகளுடன் இணைந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை நிறுவியது. செயல்பாடுகள்காவிரி நீர் சேமிப்பு, நியமனம், ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு
நதிப் படுகையில் உள்ள துயர சூழ்நிலைகளை அடையாளம் காணுதல்காவிரி நதிப் படுகையில் நீர் பற்றாக்குறை அல்லது துயர சூழ்நிலைகளை இவ்வாணையம் கண்டறிந்து குறைகளை களைகிறது. தீர்ப்பாயத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதை உறுதி செய்தல்:
ஒருங்கிணைந்த முறையில் முக்கியமான நீர்த்தேக்கங்களை இயக்குதல்காவிரி நதிப் படுகையில் உள்ள முக்கியமான நீர்த்தேக்கங்களின் செயல்பாடுகளை இந்த ஆணையம் ஒருங்கிணைக்கிறது. இதனால் திறமையான நீர் மேலாண்மை உறுதி செய்யப்படுகிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia