கிஞ்சராபு அச்சன் நாயுடு
கிஞ்சரபு அச்சன்நாயுடு (Kinjarapu Atchannaidu) ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2014 மற்றும் 2019ல் நடந்த தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தெக்கலி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். [1] [2] இவர் அக்டோபர் 2020 முதல் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவராக உள்ளார் [3] அரசியல் வாழ்க்கை1996 இடைத்தேர்தல், [4] 1999 [5] மற்றும் 2004 ஆகிய மூன்று தேர்தல்களில் அரிச்சந்திரபுரம் தொகுதியில் இருந்து அச்சன்நாயுடு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [6] அரிச்சந்திரபுரம் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2009 தேர்தலில் தெக்கலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2009-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் மரணம் காரணமாக நடந்த உடனடி இடைத்தேர்தலிலும் இவர் தோல்வியடைந்தார். [7] 2014 மற்றும் 2019 தேர்தல்களில் தெக்கலி தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] இவர் ந. சந்திரபாபு நாயுடுவின் மூன்றாவதுஅமைச்சரவையின் போது போக்குவரத்து அமைச்சராக இருந்தார். [3] சொந்த வாழ்க்கைஇவர் கிஞ்சராபு எர்ரன் நாயுடுவின் சகோதரரும் ராம் மோகன் நாயுடு கிஞ்சரபுவின் மாமாவும் ஆவார். [3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia