கிடங்கூர் சுப்ரமணிய சுவாமி கோயில்
கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Kidangoor Subramanya Temple) என்பது இந்திய மாநிலமான கேரளவின் கோட்டயம் மாவட்டத்தில் அயர்குன்னம் அருகே கிடங்கூரில் அமைந்துள்ள ஒரு பழங்கால இந்து கோயிலாகும். இது கேரளாவின் புகழ்பெற்ற சுப்பிரமண்யர்கோயில்களில் ஒன்றாகும். இது குறைந்தது 1500 ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. [1] அமைவிடம்இந்த கோயில் மன்னார்காடு - கிடங்கூர் மாநில நெடுஞ்சாலையில், மீனாட்சிலாற்றங் கரையில் அமைந்துள்ளது. இது கிடங்கூரிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலும், ஆயர்குன்னத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது.[2] தெய்வம்'திரிகிடங்கூரப்பன்' என்ற பெயரில் சுப்பிரமணியக் கடவுள் இங்கு இருக்கிறார். கிடங்கூருக்கு 'பரிகாபுரம்' என்ற மாற்றுப் பெயரும் இருப்பதால் கடவுள் 'பரிகாபுரேசன்' என்றும் அழைக்கப்படுகிறார்.[1] புனைவுகிடங்கூர், 64 நம்பூதிரி கிராமங்களில் ஒன்றாகும். இது வடக்கும்கூர் மற்றும் தெக்கும்கூர் இராச்சியங்களின் எல்லையில் இருந்தது. புராணக்கதை என்னவென்றால், சுப்ரமண்யரின் சிலை கௌன முனிவரின் கமண்டத்திலிலிருந்து தண்ணீர் வெளியேறியபோது வெளியே வந்தது. தண்ணீருடன் சேர்ந்து கொண்டு சிலையும் கிடங்கூரில் உள்ள விஷ்ணு சன்னதியை அடைந்தது. துணைக் கோயில் தெய்வங்கள்
பண்டிகைகள்இந்த கோயில் அதன் வருடாந்திர திருவிழாவை மலையாள மாதமான கும்பத்தில் (அதாவது பிப்ரவரி / மார்ச்) 10 நாட்கள் நீடிக்கும். கேரளாவின் பல கோயில்களைப் போலவே, கார்த்திகை நாளில் கொடியேற்றத்துடன் விழாத் தொடங்குகின்றன. மீனச்சிலாற்றங்கரையில் உள்ள செம்பிலாவு பூங்குன்னத்து மகாதேவர் கோவிலில் ஆராட்டு (புனித குளியல்) நடைபெறுகிறது. இந்த கோவிலில் தலைமை தாங்கும் சிவன் திரிகிடங்கூரப்பனின் தந்தையாக கருதப்படுகிறார். மகர மாதத்தில் தைப்பூசம், 'கந்த சஷ்டி' ஆகியவை மற்ற முக்கியமான பண்டிகைகளாக கொண்டாடப்படுகின்றன.[1]அம்மாவாசைக்கு அடுத்த ஆறாவது நாளில் புனித சஷ்டிவிரதத்தை செய்ய பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த யாத்ரீகர்கள் இங்கு வருகிறார்கள்.[2] காணிக்கைஉதசவபலி, துலாபரம், காவடி, சுட்டு விளக்கு, உதய அஸ்தமன பூஜை, முழுகாப்பு, பஞ்சாமிர்த அபிசேகம், பந்தீராழி, கதம்ப பாயசம் ஆகியவை இங்கே வழங்கப்படும் முக்கியமான பிரசாதங்களாகும்.[2] பட தொகுப்பு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia