கோட்டயம்
புவியியல்இவ்வூர், 9°35′30″N 76°31′20″E / 9.5916°N 76.5222°E[1] என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 47.96 மீட்டர் (157.3 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. கோட்டயம், கேரளத்தின் பதிப்பகங்களின் நகரமாகும். இந்நகரம் புகழ்பெற்ற மலையாள மனோரமா பதிப்பகத்தின் தலைமையகமாகும். கேரளத்தின் புகழ்பெற்ற மகாத்மா காந்தி பல்கலைக் கழகம் இங்கு அமைந்துள்ளது. மேலும் இங்கிருந்து மாத்ருபூமி, தேசாபிமானி, தீபிகா, கேரள கௌமுடி போன்ற முக்கிய நாளிதழ்களும் வெளிவருகின்றன. மக்கள் வகைப்பாடு2001ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 60,725 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 49% ஆண்கள்; 51% பெண்கள் ஆவார்கள். கோட்டயம் மக்களின் சராசரி கல்வியறிவு 87% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 88%; பெண்களின் கல்வியறிவு 86% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. கோட்டயம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கிப்பயணத்தில் கோட்டயம் என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |
Portal di Ensiklopedia Dunia