கிரீஷ் சந்திர முர்மு
கிரீஷ் சந்திர முர்மு (Girish Chandra Murmu; சந்தாளி மொழி:ᱜᱤ᱾ ᱪᱚ᱾ ᱢᱩᱨᱢᱩ; பிறப்பு: 21 நவம்பர் 1959), ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக நியமிக்கபட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார்.[2] ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்சில் பிறந்த இவர் முண்டா மொழி பேசும் சந்தாலி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். 1985-இல் குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாராக பணிபுரிந்தவர்.[3] கல்விகிரிஷ் சந்திர முர்மு ஒடிசாவின் உத்கல் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் பிர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றவர். ஜம்மு காஷ்மீர் ஒன்றிய துணைநிலை ஆளுநராக![]() 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் புதிதாக நிறுவப்பட்ட ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி 31 அக்டோபர் 2019 அன்று முதல் ஒன்றியப் பகுதியானது.[4] ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக 31 அக்டோபர் 2019 நள்ளிரவு அன்று கிரீஷ் சந்திர முர்மு பதவியேற்றார்.[5] [6][7][8] [9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia