கிரேசி (எழுத்தாளர்)கேரளாவைச் சேர்ந்த கிரேசி ஒரு பிரபலமான மலையாள மொழி கதைசொல்லியும், சிறுகதை எழுத்தாளரும்[1] , ஆசிரியருமாவார். 1951 ம் ஆண்டில் பிறந்த இவரது எழுத்து நடை பெண்மையின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. கிரேசியின் பல கதைகள் பெண் உடல் மற்றும் பாலுணர்வு பற்றி வெளிப்படையாக எழுதப்பட்டவை. மேலும் மலையாளத்தில் மற்ற எழுத்தாளர்களின் வழக்கமான நடைமுறைகளிலிருந்து விலகி, வெவ்வேறு கருப்பொருள்கள் மற்றும் பாணிகளில் கதைகள் எழுதியுள்ளார். இவரது கதைகள் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆலுவாவிலுள்ள எடத்தலா அல்-அமீன் கல்லூரியின் மலையாளத் துறையின் தலைவராக பணியாற்றியுள்ளார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான, படியிறங்கிப்போய பார்வதி,[2] 1991 ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. நரகவாத்தில், இரண்டு ஸ்வப்னா தர்சிகள், காவேரியுடே நேரு, ஈஸ்பு பெண்கதைகள், பணிக்கண்ணு மற்றும் ஒரு தொகுப்பு, கிரேசியுடே கதைகள் ஆகியவை அவரது முக்கிய படைப்புகளாகும். அவரது கதையான, 'பேபி டால்', தனது மகளை யதார்த்தத்திலிருந்து விலக்கி வைக்க விரும்பும் ஒரு தாயின் உணர்ச்சிவசப்பட புலம்பலைத் தடுக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.[3] தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தொன்பது கதைகளின் தொகுப்பு தமிழில் "எப்போல பணிக்களம்" என்ற பெயரில் வெளிவந்துள்ளது. "பாஞ்சாலி" கதை 1998 இல் சிறந்த மலையாளக் கதைக்கான கதா விருதை ( டெல்லி ) வென்றுள்ளது. விருதுகள்
நூல் பட்டியல்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia