சாகித்திய அகாதமி
சாகித்திய அகாதமி (Sahitya Akademi, இலக்கியக் கழகம்) என்பது இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கான அமைப்பாகும்.[1]இந்நிறுவனம், இந்திய மொழிகளின் இலக்கியம், இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்தும் நோக்கத்துடன் செயற்படுகிறது. 12 மார்ச் 1954 அன்று, இந்திய அரசின் ஆதரவுடன் தன்னாட்சி அமைப்பாக தில்லியில் உள்ள இரவீந்திர பவனில் தொடங்கப்பட்டது. சாகித்ய அகாதமி நிறுவனம் அயலக, இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த இலக்கியப் படைப்புகளைப் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, இந்திய மொழிகளில் வெளியான சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் பணப் பரிசுடன் கூடிய விருது அளித்து ஊக்கப்படுத்துவது, சிறுவர் இலக்கியங்களையும், சிறுபான்மையினர் பேசும் மொழிகளை ஊக்கப்படுத்துவது முதலிய பல பணிகளைச் செய்து வருகிறது. சாகித்திய அகாதமியின் மண்டல அலுவலகங்கள், பெங்களூரு, சென்னை, மும்பை, அகர்தலாவில் அமைந்துள்ளன. வழங்கும் விருதுகள்சாகித்திய அகாதமி விருதுஇந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்கு சாகித்திய அகாதமி விருதுடன் ரூபாய் ஒரு இலட்சம் பரிசாக வழங்கப்படுகிறது.[2] பாஷா சம்மான் விருதுஇந்தியாவில் அருகி வரும் சிறுபான்மையினர் பேசும் மொழிகளை அழிவின் விளிம்பிலிருந்து காக்க, 1996-ஆம் ஆண்டு முதல் சிறுபான்மையின மக்கள் பேசும் மொழிகளில் படைக்கப்படும் நூல்களுக்கும், மொழி மற்றும் இலக்கியப் பணிகளுக்கும் ஆண்டு தோறும் பாஷா சம்மான் விருது வழங்கப்படுகிறது.[3] இவ்விருது பெறும் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வாழும் சௌராட்டிரர் இன மக்கள் பேசும் சௌராஷ்டிர மொழி, இலக்கிய பணியைப் பாராட்டி, எழுத்தாளர்களான கே. ஆர். சேதுராமன், தாடா. சுப்பிரமணியன் ஆகிய இருவருக்கும் கூட்டாகப் பாஷா சம்மான் விருது 2006-ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. [4] [5] மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது1989-ஆம் ஆண்டு முதல் அங்கீகரிகரிப்பட்ட 24 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு பணப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. 2009-ஆம் ஆண்டு முதல் பரிசுத்தொகை ரூபாய் 50, 000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. [6] [7] 2014-ஆம் ஆண்டு வரை 25 தமிழக எழுத்தாளர்கள், தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்குச் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளனர். சிறுவர் இலக்கிய விருது (BAL SAHITYA PURASKAR)2010-ஆண்டு முதல், சிறுவர்களுக்கான சிறுகதைகள், கதைகள், புதினங்கள், கவிதைகளுக்கு பால சாகித்திய புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. [8] 2010 ஆண்டு முதல் 2015 முடிய, சிறுவர் இலக்கியத்திற்கான விருதினை இது வரை ஆறு எழுத்தாளர்கள் வென்றுள்ளனர்.[9] இளைஞர் (இலக்கிய) விருது (YUVA PURASKAR)ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதம் முதல் நாளன்று 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் சிறந்த மொழி பெயர்ப்பு நூல்கள், கதைகள், புதினங்கள், கவிதைகள் போன்ற இலக்கியப் படைப்புகளுக்கு 2011ஆம் ஆண்டு முதல் பணப்பரிசுடன் கூடிய யுவ புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. [10] தமிழ்நாட்டில் 2015ஆம் ஆண்டு முடிய ஐந்து இளைஞர்கள் யுவ புரஸ்கார் விருதை வென்றுள்ளனர். [11] நூலகம் பதிப்புப் பணியும்சாகித்ய அகாதமி நிறுவனம், இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில் உள்ள இலக்கியங்கள், இலக்கியம் சார்ந்த நூல்களுடன் மிகப் பெரிய நூலகம் கொண்டுள்ளது. மேலும் பன்னாட்டு இலக்கிய நூல்களையும் கொண்டுள்ளது. [12] மிகச் சிறந்த இலக்கியம், புதினங்கள், கவிதை நூல்களை அனைத்து இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுகிறது. மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia