கீரிப்பாறை
கீரிப்பாறை என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில், (8°23′35.2″N 77°24′35.6″E / 8.393111°N 77.409889°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 267 மீட்டர்கள் (876 அடி) உயரத்தில் அமைந்துள்ள ஒரு குன்றுப் பகுதியாகும். [1][2][3] திட்டுவிளை, பூதப்பாண்டி, வடசேரி, நாகர்கோவில் மற்றும் குலசேகரம் ஆகியவை கீரிப்பாறைக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். அரசு இரப்பர் கழகம் தன்னுடைய இரப்பர் தொழிற்சாலை ஒன்றை இங்கு அமைத்துள்ளது.[4][5][6][7][8] கீரிப்பாறை பகுதியானது, கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் என். தளவாய் சுந்தரம் ஆவார். மேலும் இப்பகுதி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக விஜய் வசந்த், 2019, 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia