விட்டுணு வாமன சிருவாதுகர் (Vishnu Vāman Shirwādkar, विष्णु वामन शिरवाडकर) (27 பிப்பிரவரி 1912 – 10 மார்ச்சு 1999), என்னும் எழுத்தாளர் குசுமாகரசு (குஷ்மாகரஜ் (மராத்தி: कुसुमाग्रज) என்னும் புனைப்பெயரில் எழுதிவந்த புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதினப்படைப்பாளி, நாடக ஆசிரியர். இவர் மாந்தநேயராகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் அறத்துக்காகவும் பாடுபட்டவராகவும் அறியப்படுகின்றார்[1].
எழுத்துப்பணி
இவருடைய ஏறத்தாழ ஐம்பதாண்டு எழுத்துப்பணி இந்தியா விடுதலை பெறும் முன்பிருந்தே தொடங்கிவிட்டது. 16, கவிதைத்தொகுப்புகளும், மூன்று தொகுதி புதினங்களும், எட்டுத்தொகுதி சிறுகதைகளும், ஏழு தொகுதி உரைநடைக் கட்டுரைகளும், 18 நாடகங்களும் ஓரங்க நாடகங்களும் எழுதி புகழீட்டியுள்ளார்[2]. இவர் எழுதிய விசாக (1942) என்னும் பாடற்தொகுப்பு இந்திய விடுதலைக்கு இயக்கத்தினருக்குப் பேரூக்கம் அளித்தது. இது இன்று இந்திய இலக்கியத்தில் உயர்படைப்பாகக் கருதப்படுகின்றது.[3]. இவருடைய நாடகப் படைப்பாகிய நாட்சம்ராட்டு (Natsamrat) மராத்தி எழுத்துலகில் போற்றப்படுகின்றது.
விருதுகள்
இவர் நாடளாவிய பல பரிசுகளைப் பெற்றுள்ளார், அவற்றுள் 1974 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது விருதும், 1988 ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருதும் குறிப்பிடத்தக்கன. இவர் உலக மராத்தி மாநாட்டின் தலைவராக 1989 இல் இருந்தார்[2]. இவர் மகாராட்டிரத்தில்புனே நகரத்தில் பிறந்தார், ஆனால் பெரும்பாலான வாழ்க்கையை மகாராட்டிரத்தில் நாசிக்கு நகரத்தில் கழித்தார்.