குச்சிப்புடி, கிருட்டிணா மாவட்டம்
குச்சிப்புடி (Kuchipudi) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் கிருட்டிணா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது குச்செலாபுரம் அல்லது குச்சிலாபுரி என்றும் அழைக்கப்படுகிறது.[2] இது எட்டு முக்கிய இந்தியப் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான குச்சிப்புடி என்ற பெயரிடப்பட்ட நடன வடிவத்தின் தோற்றம். ஆந்திர மாநில தலைநகர் வலயத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மோவ்வா மண்டலத்தில் உள்ள கிராமங்களில் இதுவும் ஒன்றாகும்.[3] நிலவியல்இந்த இடம் கிருட்டிணா மாவட்டம் மற்றும் குண்டூர் மாவட்டத்தின் எல்லையாகும். இது, கொல்லூர் கிராமத்திற்கு மேற்கே உள்ளது. இது மச்சிலிப்பட்டணம் வருவாய் பிரிவின் மோவ்வா மண்டலத்தில் அமைந்துள்ளது.[4][5] கல்விகுச்சிப்புடியின் நடன வடிவத்திற்கு புகழ்பெற்ற பொட்டி சிறீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள எட்டு பள்ளிகளில் கிராமத்தில் உள்ள சிறீ சித்தேந்திர யோகி கலா பீடமும் ஒன்றாகும்.[6] வரலாறுபொட்டி சிறீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகத்தின் எட்டு பள்ளிகளில் ஒன்றான சித்தேந்திர யோகி கலா பீடம், இந்த ஊரில் அமைந்துள்ளது. குச்சிப்புடி நடனம் சித்தேந்திர யோகியால் உருவானது.[7] போக்குவரத்துமச்சிலிபட்டணம் இந்த ஊரிலிருந்து 24 கிலோமீட்டர் (15 மைல்) தொலைவில் உள்ளது . குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia