குண்டூர் மாவட்டம்
குண்டூர் மாவட்டம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் குண்டூர் நகரில் உள்ளது. 2,443 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாநிலத்தில், 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 20,91,075 மக்கள் வாழ்கிறார்கள்.[3][4] மாவட்டம் பிரிப்புஇம்மாவட்டத்தின் சில வருவாய் கோட்டங்களைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று புதிய பாபட்லா மாவட்டம் மற்றும் பாலநாடு மாவட்டம் நிறுவப்பட்டது.[5][6] புவியியல்குண்டூர் மாவட்டம் 2,443 சதுர பரப்பளவு கொண்டது,[7][8] மாவட்டத்தின் வடகிழக்கில் கிருஷ்ணா ஆறு பாய்கிறது. மாவட்டத்தின் தென்கிழக்கில் வங்காள விரிகுடா இருக்கின்றது. தெற்கில் பிரகாசம் மாவட்டமும் மேற்கில் மகபூப்நகர் மாவட்டமும் உள்ளன. வடமேற்கில் நல்கொண்டா மாவட்டம் உள்ளது. ஆட்சிப் பிரிவுகள்இந்த மாவட்டத்தை 18 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். இதில் மூன்று வருவாய்க் கோட்டங்கள் உள்ளன. மண்டலங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
படங்கள்
மேலும் பார்க்கமேற்கோள்கள்
வெளியிணைப்புக்கள்
|
Portal di Ensiklopedia Dunia