குஞ்ஞாலி மரைக்காயர்

இந்திய கடற்படையால் அமைக்கப்பட்ட குஞ்ஞாலி மரைகாயர் நினைவுத்தூண் இடம்:கோட்டக்கல், வடகறா,கேரளம்
குஞ்ஞாலி மரைக்காயர்களின் மூதாதையர்  இல்லம் ,தற்போது அருங்காட்சியகம்

குஞ்ஞாலி மரைக்காயர் என்பது கோழிக்கோட்டு சாமுத்ரி மன்னனின் கடற்படைத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர். நால்வர் குஞ்ஞாலி மரைக்காயர் பதவி வகித்திருந்தனர்.  பதினாறாம் நூற்றாண்டுகளில் இவர்கள் போர்த்துகீசியர்களுக்கு எதிராக 1502 இல் தொடங்கி 1600கள் வரை சாமரின் கடற்படையில் சிறப்பாக போர் புரிந்தனர்.

பட்டம்

குஞ்சாலிகளுக்கான பட்டங்கள் சாமரின் மன்னர்களால் வழங்கப்பட்டன. மரக்கலம் என்ற வார்த்தையை தழுவி மரைக்காயர் என அழைக்கப்பட்டனர்.[சான்று தேவை]

கீழே குஞ்ஞாலி மரைக்காயர்கள் பதவி வகித்த காலமும் அவர்களின் இயற்பெயரும் தரப்பட்டுள்ளது.

வரிசை இயற்பெயர் பதவிக்காலம்
முதலாம் குஞ்ஞாலி குட்டி அஹம்மத் அலி 1520-1531
இரண்டாம் குஞ்ஞாலி குஞ்ஞாலி மரைக்காயர் 1531-1571
மூன்றாம் குஞ்ஞாலி பட்டு குஞ்ஞாலி 1531-1571
நான்காம் குஞ்ஞாலி முஹம்மது அலி 1595-1600

அரபு முசுலீம்கள் தனி ஆதிக்கம் செலுத்தி வந்த மலையாளக் கடலில் போர்ச்சுக்கீசியர் வணிகஞ் செய்ய வந்தனர். இது அரபு முசுலீம்களுக்குப் பிடிக்கவில்லை. முதலில் கொச்சி மன்னனும் போர்ச்சுகீசியர்களை எதிர்த்தான். நாலாம் குஞ்ஞாலி போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்துப் போரிட்டார். ஆனால், குஞ்ஞாலி அரசைக் கைப்பற்ற முயற்சிப்பதாக மன்னனிடம் கூறி மன்னனோடு இணைந்து நான்காம் குஞ்ஞாலியைத் தோற்கடித்தனர். [சான்று தேவை]

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya