குமாரகோவில்
குமாரகோவில் (Kumarakovil) என்பது கன்னியாகுரி மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர். கன்னியாகுமரியிலிருந்து ஏறத்தாழ 34 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுர வானூர்திநிலையத்திலிருந்து 50 கி.மீ. தொலைவிலும் இந்தச் சிற்றூர் அமைந்துள்ளது. இங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் தக்கலை பேருந்துநிலையம் உள்ளது. இங்கிருந்து குமாரகோவிலுக்கு பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு நூருல் இசுலாம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.[1] இங்குள்ள வேளிமலை முருகன் கோவில் மிகவும் புகழ்பெற்றது.[2] இங்குள்ள 200 அடி உயரமுள்ள வேளிமலை என்ற குன்றில் வேளிமலை குமாரசாமி கோவில்[3] குடவரைக் கோவிலாகக் கட்டப்பட்டுள்ளது. முருகரும் வள்ளியும் முதன்மைத் தெய்வங்களாக உள்ளனர்; இங்குதான் இவர்கள் திருமணம் நிகழ்ந்ததாக நம்பப்படுகின்றது. கேரளாவிலிருந்து இங்கு பெரும்பாலான பக்தர்கள் வருகின்றனர். கோவிலின் விழாக்களுக்கு கேரளக் காவல்துறையின் இசைக்குழு பங்கேற்கிறது. மேற்கோள்கள்
உசாத்துணை |
Portal di Ensiklopedia Dunia