குரு அரவிந்தன்
குரு அரவிந்தன் கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம் எழுதுவதுடன் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள், மற்றும் நாடகங்களும் எழுதி வருகிறார். வாழ்க்கைக் குறிப்புஇலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை பெயர் அருணசலம் குருநாதபிள்ளை. காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். எழுத்துத் துறையில்இவரின் சிறுகதைகள், தென்னிந்திய சஞ்சிகைகளான ஆனந்த விகடன், குமுதம், கல்கி, யுகமாயினி ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கனடாவில் தாய்வீடு, தூறல், உதயன் போன்ற பத்திரிகைகளில் இவரது தொடர்கட்டுரைகள் வெளிவருகின்றன. இலங்கையில் தினக்குரல், வீரகேசரி, செருமனியில் வெற்றிமணி, லண்டனில் புதினம், பாரிசில் உயிர்நிழல் போன்ற பத்திரிகைகளிலும் இவரது கட்டுரைகள் வெளிவருகின்றன. இணையத்தில்இணையத்தில் "பதிவுகள்", "திண்ணை" போன்ற இணையத்தளங்களில் நாடகம், படைப்பிலக்கியம் சம்பந்தமான விமர்சனக் கட்டுரைகளை எழுதி வருகின்றார். சிறுகதைத் தொகுப்புக்கள்
நாவல்கள்
ஒலிப்புத்தகங்கள்
மேடை நாடகங்கள்தெல்லிப்பழை மகாஜனா பழைய மாணவர்களின் கலைவிழாவுக்காக இவர் நாடகங்களை எழுதியுள்ளார். திரைக்கதைகனடாவில் பல திரைப்படங்களுக்கு இவர் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்..
மேடையேறிய நாடகங்கள்
மேடையேறிய சிறுவர் நாடகங்கள்
இலக்கிய பரிசுகள்
விருதுகள்
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia