குழலியக்குருதியுறைமை
குழலியக்குருதியுறைமை அல்லது இரத்தக்கட்டியடைப்பு அல்லது குருதி உறைதல் திரைப்புவாதை அல்லது துரோம்போசிஸ் (Thrombosis) (கிரேக்கம்: θρόμβωσις) என்பது குருதிக் கலன்களின் உள்ளே, குருதி உறைகட்டிகள் (blood clot) உருவாகி, குருதிச் சுற்றோட்டத் தொகுதியூடாக நடைபெறும் குருதி ஓட்டத்தில் தடை ஏற்படக் கூடிய நோய் நிலையாகும். வழமையாக, அடிபட்ட அல்லது காயப்பட்ட இடத்தில் குருதி வெளியேறி வீணாகாமல் இருக்க உடல் இவ்வகையான உறைகட்டிகளை உருவாக்கி குருதி வெளியேறுவதைத் தடுக்கின்றது. அதாவது அந்நிலைகளில் குருதிக் கலனின் சுவர் பாதிப்படைந்து குருதி வெளியேறுவதை குருதி உறைதல் தடுக்கும். ஆனால் அவ்வாறின்றி, இதே தொழிற்பாடு குருதிக்கலன்களுக்கு உள்ளே ஏதேனும் காரணத்தால் நிகழ்ந்தாலும், இக்கட்டிகள் உருவாகின்றன. அவ்வாறு நிகழ்வது இயற்கைக்கு மாறான ஒரு நோய் நிலையாகும். இந்நோய் அல்லது உடலியக்கச் சிக்கலில் உருவாகும் குருதி உறைகட்டிக்கு திரோம்போசு என்று கிரேக்கத்தில் thrombus; (கிரேக்கம்: θρόμβος) என்று பெயர். இதனால் இந்நோய் துரோம்போசிஸ் என அழைக்கப்படுகின்றது. இந்த சிக்கல் குறைபாடு உள்ளவர்களில், இரத்தக்குழாய் பழுதடையாவிட்டாலும் இரத்தக்கட்டிகள் உருவாகி உடலியக்கத்துக்குப் பெரும் இடர் உண்டாக்குகின்றது. இப்படி உருவான இரத்தக்கட்டிகள் சில சமயம் உருவான இடத்தில் இருந்து பிரிந்து/கழன்று மற்ற இடங்களுக்குச் செல்கின்றது. இவ்வகையான நகரும் திண்மப்பொருளை மருத்துவத்தில் எம்போலசு (embolus) என்கின்றனர்.[1][2] தமனியின் புழையின் மேற்பரப்பளவை 75% மேலாக ஒரு குருதி உறைகட்டி ஆக்கிரமிக்கும் பொழுது, லாக்டிக் அமிலம் போன்ற வளர்சிதைமாற்ற பொருட்கள் திரள்வதாலும், இழையங்களுக்குக் கிடைக்கும் பிராணவாயு அளவு குறைவதாலும், தீங்கான அறிகுறிகள் ஏற்படும் அளவிற்கு, இழையங்களுக்குச் செல்லும் இரத்த ஒட்டம் குறைகிறது. 90 % மேலான தடை என்பது பிராணவாயு அல்லது ஆக்சிசன் முற்றிலும் இல்லாத நிலையான அனாக்சியா (Anoxia) என்னும் உயிர்வளி அற்ற நிலை, மற்றும் ஆக்சிசன் குறைவால் ஏற்படும் உயிரணு இறப்பின் ஒரு வகையான இழையநசிவு (Necrosis) ஆகியவற்றில் முடியக்கூடும். காரணங்கள்மிகவும் அறியப்பட்ட வகையில் கூறுவதெனின், குழலியக்குருதியுறைமை என்பது கீழ்காணும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அசாதாரண நிகழ்வுகளால் உருவாகலாம். இது 'விர்கோவின் மும்மை' (Virchow's triad)என அழைக்கப்படும் :
சாதாரணமாக விர்கோவின் மும்மையாலேயே ஒரு குழலியக்குருதியுறைமை உருவாகின்றது. இதை விரிவாக எடுத்துரைப்பதென்றால், இந்த நோய் வகைகள் கீழ்க் காண்பவற்றை உள்ளடக்கும்: ஒரு இரத்த நாளத்தின் சுவருக்கு ஏற்படும் சேதம் (காயம், தொற்று, அல்லது பிளவீடுகளில் கிளர்வு ஓட்டம் போன்றவை); காயமுற்ற பகுதியைத் தாண்டி இரத்த ஓட்டம் மெதுவாகப் பாய்வதாலோ அல்லது தேங்குவதாலோ ஏற்படுவது (இது நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் நிலைக்குப் பின்னர் நிகழக்கூடியது - உதாரணத்திற்கு, நீண்ட நேரம் பயணிக்கும் விமானத்தில் அமர்ந்திருப்பது); திரளல் மிகைப்பு எனப்படும் இரத்தத்தின் ஒரு நிலையால் ஏற்படுவது (உதாரணத்திற்கு, மரபணுவின் குறைபாடுகளாலோ அல்லது தன்னுடல் தாக்குநோய் அல்லது சுய நோயெதிர்ப்பு முறைமைக் கோளாறுகளாலோ ஏற்படுவது). நோயின் பிரிவுகள்குழலியக்குருதியுறைமைகளில் இரண்டு வகைகள் உள்ளன, இவை இரண்டுமே பல்வேறு துணைவகைகளைக் கொண்டுள்ளன. சிரையியப் குழலியக்குருதியுறைமைசிரையியப் குழலியக்குருதியுறைமை என்பது ஒரு சிரை யினுள் உருவாகும் படிம உறைவு அல்லது குருதி உறைகட்டி இனால் ஏற்படுவதாகும். இப்பிரிவில் பல நோய்கள் வகைப்படுத்தப்படுகின்றன: ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமைஆழ்ந்த சிரை குழலியக்குருதியுறைமை (டிவிடி-DVT) என்பது ஒரு ஆழ்ந்த சிரைக்குள் உருவாகும் இரத்த உறைவாகும். இது தொடைச்சிரை போன்ற கால் சிரைகளை அதிகமாகத் தாக்கும். ஒரு ஆழ்ந்த சிரைக்குள் இரத்த உறைவு உருவாவதற்கு மூன்று கூறுகள் முக்கியமாக உள்ளன- அவை இரத்த ஓட்டத்தின் அளவீடு, இரத்தத்தின் அடர்த்தி மற்றும் குழல் சுவரின் தன்மை ஆகியவையாகும். வீக்கம், வலி மற்றும் பாதிக்கப்பட்ட இடம் சிவத்தல் ஆகியவை இத்தகைய டிவிடியின் நன்கு அறியப்பட்ட அறிகுறிகள் ஆகும். வாயிற்சிரைப் குழலியக்குருதியுறைமைவாயிற்சிரை குழலியக்குருதியுறைமை என்பது சிரையிய படிம உறைவின் ஒரு வகையாகும்; இது ஈரலின் வாயிற்சிரையைப் பாதிக்கும்; இதுவே வாயிற்சிரையின் அதிக இரத்த அழுத்த த்திற்கும் ஈரலுக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதற்கும் காரணமாகிறது.[3] வழமையாக, இத்தகைய நிலை கணைய அழற்சி, கரணை நோய், குழலுறுப்பு சுவர் பிதுக்கம் அல்லது பித்தக்குழல் புற்று நோய் போன்ற நோய்க்குறியியல்களைக் காரணமாகக் கொள்கிறது. சிறுநீரக சிரைப் குழலியக்குருதியுறைமைஒரு குழலியக்குருதியுறைமை சிறுநீரக சிரையைத் தடை செய்வதே சிறுநீரக சிரைப் குழலியக்குருதியுறைமை எனப்படுகிறது. இது சிறுநீரகப் பையிலிருந்து திரவங்கள் வெளியாவது குறைவதில் விளைகிறது. இரத்த உறைவுத் தடுப்பு சிகிச்சையே இதற்கான சிறந்த சிகிச்சை முறைமையாகும். கழுத்துச் சிரை குழலியக்குருதியுறைமைகழுத்துச் சிரை குழலியக்குருதியுறைமை என்பது தொற்றுநோய், சிரை வழி செலுத்தப்படும் மருந்துகளின் பயன்பாடு அல்லது புற்றுநோய் கட்டி ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய ஒரு நிலையாகும். இந்த கழுத்துச்சிரை குழலியக்குருதியுறைமை என்பது பல சிக்கல்களை உருவாக்கக் கூடும்; அவற்றுள் மண்டலக் நுண்ணுயிர் நச்சேற்றக் குருதி, நுரையீரல் சிரை இரத்த உரக்கட்டி அடைப்பு மற்றும் பார்வைத்தட்டு வீக்கம் ஆகியவை அடங்கும். சிரையில் ஒரு தீவிரமான வலியுடன் உருவாகும் இதைக் கண்டறிவது கடினமானதாகும்; ஏனெனில் இது ஒரு முறைமையற்று உருவாகக்கூடும்.[4] பட்-சியாரி நோய்க்கூட்டறிகுறிபட்-சியாரி நோய்க்கூட்டறிகுறி என்பதானது ஈரல் சிரை அல்லது கீழ்ப் பெருஞ்சிரையின் அடைப்பாகும். இந்த வகையான படிம உறைவு கீழ் வயிற்று வலி, பெருவயிறு எனப்படும் மகோதரம் மற்றும் ஈரல் பெருக்கம் ஆகியவற்றுடன் தோன்றுகிறது. மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவது துவங்கி தடைமாற்றக் கருவிகள் கொண்டு அறுவை சிகிச்சை செய்வது வரையில் இதற்கான சிகிச்சை முறைமைகள் வேறுபடும். பேஜட்-ஷ்ரோட்டர் நோய்பேஜட் ஷ்ரோட்டர் நோய் என்பது முன்னங்கை / முன்னங்கால் சிரை (அக்குள் சிரை அல்லது காரை எலும்புக் கீழ் சிரை போன்றவை) ஆகியவற்றில் உருவாகும் படிம உறைவால் ஏற்படும் அடைப்பாகும். தீவிரமான உடற்பயிற்சிகளுக்குப் பின்னரே இந்த நிலை தெரிய வருகிறது; மேலும், பொதுவாக, மற்றபடி ஆரோக்கியமான இளைஞர்களிடையே இந்த நிலையானது வழமையாக உள்ளது. பெண்களை விட ஆண்களே அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகிறார்கள். பெருமூளைச்சிரை நெற்றி எலும்புப்புழை குழலியக்குருதியுறைமைபெருமூளைச்சிரை புரை படிம உறைவு (சிவிஎஸ்டி) என்பது தாக்க த்தின் ஒரு அரிதான வடிவாகும்; இது கடின உறை சிரையின் புரை யில் ஒரு படிம உறைவால் ஏற்படும் அடைப்பின் விளைவாகும். தலைவலி, அசாதாரணமான பார்வை, மற்றும் தாக்கத்தின் அறிகுறிகளில் சிலவான முகம் மற்றும் கை கால்களில் ஒரு பகுதி சோர்வுறுதல் மற்றும் வலிப்புத்தாக்கம் ஆகியவை இதன் அறிகுறிகளுள் அடங்கும். பொதுவாக, இந்த நோயானது ஒரு கணினி வழி உடலுறுப்பு ஊடுகதிர்ப் படம் அல்லது காந்த அதிர்வு அலை வரைவு ஆகியவற்றைக் கொண்டு கண்டறியப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் அநேகம் பேர் முற்றிலும் குணமடைகிறார்கள். இதில் இறப்பு எண்ணிக்கை 4.3% ஆகும்.[5] தமனிசார் குழலியக்குருதியுறைமைஒரு தமனி க்குள் உருவாகும் படிம உறைவு என்பதே தமனிசார் படிம உறைவு எனப்படுகிறது. பல சமயங்களில், கூழ்மைக்கரட்டில் ஏற்படும் காயத்தினால் தமனிசார் படிம உறைவு ஏற்படுகிறது; எனவே கூழ்மைப் படிம உறைவு என்றும் இது குறிப்பிடப்படுகிறது. தாக்கம்மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையினால் மூளையின் இயக்கம் விரைவாகக் குறைவதே தாக்கம் என்பதாகும். குருதியோட்டக்குறை, படிம உறைவு, தக்கை (அங்கிருக்கும் ஒரு துகள்) அல்லது இரத்த ஒழுக்கு (குருதி ஒழுகுதல்) ஆகியவற்றால் இது நிகழக்கூடும். ஒரு படிம உறைவினால் ஏற்படும் தாக்கத்தில், ஒரு படிம உறைவு (இரத்த உறைவு) சாதாரணமாக பெருந்தமனி தடிப்பு முளைகளைச் சுற்றி உருவாகும். தமனியின் அடைப்பு படிப்படியாக நிகழ்வதால், இதன் அறிகுறிகளான படிம உறைவு தாக்கங்களும் மெதுவாகவே நிகழும். படிம உறைவு தாக்கம் என்பது பெரிய நாள நோய் மற்றும் சிறிய நாள நோய் என இரண்டு வகைகளாக பிரிக்கப்படலாம். முதலாவது, உட்செவிப்பறை, முதுகெலும்புச் சிரை மற்றும் வில்லியின் வட்டம் போன்ற நாளங்களைப் பாதிக்கும். இரண்டாவதானது, வில்லியின் வட்டத்தின் கிளைகள் போன்ற நாளங்களை பாதிக்கும். இதயத்திசு இறப்புஇதயத்திசு இறப்பு என்பது ஒரு இரத்த நசிவுறலால் (குருதியோட்டக் குறையால் திசுக்கள் இறப்பது) ஏற்படுவதாகும்; இது பெரும்பாலும் மகுட உரு தமனியை ஒரு படிம உறைவு அடைப்பதால் ஏற்படுகிறது. அவசர மருத்துவ சிகிச்சை சரியான நேரத்தில் அளிக்கப்படவில்லையென்றால் இந்த இதயத் திசு இறப்பானது உயிருக்கு ஆபத்தாக முடியக்கூடும். முதல் முறை (தாக்குதல்) ஏற்படுகையில் 12 மணி நேரத்திற்குள் கண்டறியப்பட்டால் இரத்த உறைவுச் சிதைப்பி சிகிச்சை தொடங்கப்படுகிறது. ஈரல் தமனி இரத்த உறைவுபெரும்பாலும், ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தோன்றும் ஒரு மிகப் பெரும் சிக்கலாக இந்த ஈரல் தமனி இரத்த உறைவு உருவாகிறது.[6] தமனிசார் தக்கைதமனிசார் தக்கை என்பது கை மற்றும் கால் போன்ற உறுப்புகளில் உருவாகக்கூடும்.[7] தக்கையடைப்புஒரு இரத்த உறைவு நிகழ்ந்த இடத்தில் நுண் கிருமிகள் இருப்பின், அந்த இரத்தக் கட்டி உடைந்து, சுழற்சி மண்டலம் முழுவதும் கிருமிகளை (சீழ் இரத்தம்,சீழ் தக்கை) பரப்பி விடும். மேலும் அவை எங்கெல்லாம் தங்குகின்றனவோ அங்கெல்லாம் மாற்றிடமேறும் சீழ்க் கட்டிகளை உருவாக்குகின்றன. நோய்த்தொற்று இல்லாத நிலையில், ஒரு இரத்தக்கட்டியானது தானாகவே நகர்ந்து ஒரு தக்கை போல சுழற்சி மண்டலத்தை அடையக்கூடும்; இறுதியில் ஒரு இரத்த நாளத்திற்குள் சென்று அதை முழுமையாக அடைத்து விடலாம்; மிகு விரைவில் இதற்கு சிகிச்சை அளிக்கப்படாவிடின், இது இருக்கும் இடத்தைத் தாண்டி இருக்கும் திசு இறந்து போகும் நிலைக்கு (இரத்த நசிவுறல்) கொண்டு செல்லும். இத் தடங்கலானது மகுட உரு தமனியில் ஏற்படின், இதயத்தில் குருதியோட்டக் குறைவு நிகழும் வாய்ப்புகள் உள்ளன; இதனால் பிராணவாயு குறைந்து இதயத் தசைத்திசுக்கள் ஒழுங்குடன் செயல்பட இயலாது போகும். இவ்வாறான பிராண வாயு குறைபாடானது இதயத் திசு இறப்பை விளைவிக்கக்கூடும். பெரும்பான்மையான இரத்தக்கட்டிகள், நார்த்திசுக்கள் போல ஒருங்கிணைகின்றன; பின்னர் இந்த இரத்தக்கட்டி உள்ள நாளமானது படிப்படியாக வேறு வழி திருப்பப்படுகிறது. தடுப்பு முறைகள்அபாயமானவை என அறியப்படும் இரத்த உறைவு மற்றும் தக்கையடைப்புகளில் உறைவு எதிர்ப்பிகளைப் பயன்படுத்தலாம். சிரை உறைவுகளிலேயே மிக சாதாரணமாக காணப்படுவது ஆழ் சிரை படிம உறைவாகும் (டிவிடி); இது உடலில் உள்ள ஆழமான சிரைகளில் ஏற்படும் இரத்தக்கட்டியாகும். தமனிசார் இரத்த உறைவு என்பது பெரும்பாலும் இதயத்திற்கு இரத்தத்தை அனுப்பும் தமனிகளில் உருவாகின்றன; இதனால் மாரடைப்பு விளைகின்றது. இது மூளையின் தமனிகளிலும் உருவாகக்கூடும்; இதன் மூலம் இவை ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தலாம். சில சமயங்களில், இரத்தக்கட்டியின் ஒரு பகுதியோ அல்லது முழுவதுமோ தனது தோற்றுவாயிலிருந்து நகர்ந்து இரத்த ஓட்டத்தில் பயணிக்கக்கூடும். இவ்வாறு நிகழ்ந்தால், இந்த உறைவு உடலின் மற்றொரு பாகத்தில் தங்கி விடலாம். இது தக்கையடைப்பு என அறியப்படுகிறது. நுரையீரலில் தங்கும் ஒரு இரத்த உறைவு நுரையீரல் தக்கையடைப்பு என அழைக்கப்படுகிறது. பொதுவாக, அதிக அளவிலான இரத்தப்போக்கிற்கான அபாயத்தை அனைத்து உறைவு எதிர்ப்பிகளும் சிறிதளவேனும் அதிகரிப்பதால், ஒரு அபாய-சாதக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். எடுத்துக் காட்டாக, இதய ஊற்றறை உதறலில் (அதிக வயது மற்றும் அதிக இரத்த அழுத்தம் போன்ற கூடுதல் அபாய தோற்றுவாய்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட) ஒரு தாக்கத்தால் உருவாகும் அபாயமானது, வார்ஃபாரின் என்னும் உறைவு எதிர்ப்பியின் பயன்பாட்டால் ஏற்படும் அதிக அளாவிலாயினும் அறியப்பட்டதான இரத்தப்போக்கின் ஆபத்துக்களை விட அதிகமானதாகும்.[8] மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நபர்களில், இரத்த உறைவே பல சிக்கல்களுக்கும் மற்றும் சில சமயங்களில் உயிரிழப்புக்கும் முதன்மைக் காரணமாக அமைகிறது. எடுத்துக் காட்டாக, யூகேயில் 2005ஆம் ஆண்டு மருத்துவமனையில் இரத்த உறைவு அடைந்து அதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 25,000 என்று அதன் நாடாளுமன்ற ஆரோக்கிய தேர்ச்சிக் குழு உரைக்கிறது.[9] ஆகவே, இரத்த உறைவு முற்காப்பு (இரத்த உறைவின் தடுப்பு) என்பதின் வலியுறுத்தல் அதிகரித்து வருகிறது. அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளில், பரவலாக அளவீடுள்ள அழுத்தம் தரும் காலுறைகள் பயன்படுத்தப்படுகின்றன; மேலும் தீவிரமான நோய், நீண்ட காலம் அசைவில்லாதிருத்தல் மற்றும் அனைத்து எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, தொழில் சார்ந்த வழிகாட்டுதல்கள் குறைந்த மூலக்கூறு எடை கொண்ட இரத்த உறைவு எதிர்ப்பிகள், இயந்திர கெண்டைக்கால் அழுத்தம் அல்லது (மற்ற அனைத்தும் எதிர் விளைவுகள் தோற்றுவித்து மற்றும் அந்த நோயாளி சமீபத்தில் ஆழ் சிரை இரத்த உறைவால் பாதிக்கப்பட்டிருந்தால்) ஒரு பெருஞ்சிரை வடிப்பான் பொருத்துதல் ஆகிய முறைகளைப் பயன்படுத்துமாறு பரிந்துரைகள் அளிக்கப்படுகின்றன.[10][11] அறுவை சிகிச்சை அற்ற மருத்துவ நோயாளிகளில் எல்எம்டபிள்யுஹெச் (LMWH) என்பதும் இரத்த உறைவைத் தடுக்கிறது.[11][12] மேலும், முறைமையான வழிகாட்டுதல்களை எதிர்நோக்கிய தடுப்புச் செயற்பாடுகள் மருத்துவ நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று யுனைடெட் கிங்டம் நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி வழிகாட்டுதல் அளித்துள்ளார்.[9] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia